Sunday 16 June 2013

நீயும் நானும் மட்டும் .....

எண்ணெய் இல்லாத சமையல்.....
ஆடம்பரம் இல்லாத
இயற்கை அழகு....
பவுடர் பூச்சு இல்லாத முகம்....

வெட்டி வைக்காத
முழுநீளக் கருங்கூந்தல்....
அதில் புதைந்து கிடக்கும்
காதல் வழியும் விழிகள்....

சாயம் பூசாத கஞ்சனாய்
கன்னத்துக்கு ஒத்தனமிடும்
இதழ்களில் கள் ஆகிடும்
காதல் முத்தத்தேன்.

திறந்து வைத்த கதவின்
வழியே தென்றல் காற்று.....
ஜன்னல் வழியே சாகசமாய்
மயக்கும் மல்லிகை வாசம்.....

மொட்டைமாடியில் காயும் நிலா....
அங்கு கிறக்கத்தில் கிடக்கும்
விரிப்பில்லாத படுக்கை....
மின் விசிறி இல்லாத தூக்கம்...

உள்ளில்லாத ரவிக்கை,
குத்தமுடியாத மெத்தென முள்
உளைந்துகிடக்கும் சேலை....
இடுப்புமடிப்பின் மச்சம்,
துடிக்கும் இளமை உச்சம்....

கணினி இல்லாத வாழ்க்கை
போய் விடுவோம்
பழைய காலத்திற்கு....
பொய் இல்லாத நிஜ வாழ்க்கைக்கு

அங்கு நீயும் நானும் மட்டும்
எந்த இயந்திரத்தனமும்
நம்மை தொல்லை செய்யாமல்
மயங்கி இயங்கிக்கொண்டே....

No comments:

Post a Comment