உள்ளம் என்னவோ
உன் பெயர்
சொல்லியே துடித்தாலும்
உதடுகள் ஏனோ
அதை வெளி
சொல்ல மறுக்கின்றன...
காரணம்;
என் உள்ளத்துடிப்புகளை
நீயாக உணர்வாய்
என எண்ணி...
காத்துகிடகின்றன
என் உதடுகள்...
உன் வரவுக்கு பிறகும்
தனித்தேதான் இருக்கிறேன்....
இருந்தும்
முன்பில்லாத இன்பம்
இப்போதிருக்கிறது....
என்னுள் தானே
நீயும் வாழ்கிறாய்...
என் தனிமையிலும்
இனிமை
காண செய்கிறாய்.....
இறக்காமல்தான் இருக்கிறேன்
இன்னும் நீ சுவாசிப்பதால்..
மரிக்காமல்தான் இருக்கிறேன்
இன்னும் நீ மறக்காதாதால்..
நீ நேசிக்க மறந்தால்
நான் சுவாசிக்க மறப்பேன்..
நான்
இருப்பதும் இறப்பதும்
உன்னிடம் உள்ளது!!
சுவாசிக்க மறந்தாலும்
என்னை நேசிக்க
மறக்காதே...
நான் வாழ அல்ல...
என்றும் நீ வாழ...
என்னுள்
என் நேசமாக...
கல்லாய் மாறிப்போன
என் கற்பனையை
உளியாக இருந்து செதுக்கி
என்னை மீண்டும்
கவிஞன் ஆக்கிய
சிற்பியே...
எங்கனம் உன்னை நான் மறப்பது...
நன்றி மறப்பது நன்றன்று அல்லவா!!
பின்
எங்கனம் உன்னை நான் மறப்பது..
முயன்றாலும் முடியாது;
முயலவும் என் மனம் விரும்பாது!!