கருங்கூந்தலாய் படர்ந்து கிடந்த
வான்மேகம் உதிர்த்தது தேன்மழையை.
மனம் விரும்பி மணம்பரப்பும் மலர்கள்
மயங்கி அதில் தேன் கலந்தது.
காதலியே, கலந்ததேனை பிரித்தெடு
எனில் நானென்ன அன்னமா சொல்.
சிக்கிய என்னை பிரித்தெடுக்க
சிறகெடுத்து வந்தவளே கொஞ்சம் நில்.
நிலாவிடமே சொல்லியுன்னைச்
சிறையெடுக்க அனுப்பிவைக்கவா?