Thursday 27 June 2013

என்னவொரு வேதனை

உன் கண்ணில் இருந்து வழிந்து விழும் 
கண்ணீர் வெள்ளி துளிக்கு நான் காரணம் 
இல்லை.... 
ஆனால் அந்த வெள்ளி துளிகளை கீழே 
விழாமல் என் விழிகளால் 
தாங்கிக் கொள்வேன்..... 
காரணம் அழுவது நீ என்பதால்.....

இரவுப் பனியில் 
குளித்த பூமிக் கன்னி பெண் 
காலை சூரியனால் 
தலை துவட்டி, 
பச்சை பட்டு உடுத்தி, 
யாரை பார்க்க, 
இத்தனை 
நாணத்தோடு காத்திருக்கிறாள்?

பாடம் எழுத, கட்டுரை எழுத 
என்று எதற்காக நான் 
என் பேனாவை தொட்டாலும் 
அது எழுதுவது என்னவோ 
உன் பெயரை மட்டும்தான்...... 
எனக்கு மட்டும் பேனா 
படைக்கப்பட்டது 
உன் பெயரை எழுதவும், 
காதல் கடிதம் எழுதவும், 
மட்டும்தான்!!

என் உயிரின் 
இறுதி அணு வரை 
உன் பெயரை சொல்லிக் கொண்டே இருந்தாலும் 
சோர்ந்து போகாது. 
ஏனென்றால், 
உன் பெயர் சொல்லவே இறைவன் 
என்னை படைத்தான்! 
உன் பெயரிலேயே 
அத்தனை அன்பு இழைகிறதடி!!

உண்மையான தன்னம்பிக்கை என்றும் தோற்பதில்லை. 
எத்தனை முறை படை எடுத்தாய் 
என்பது முக்கியம் இல்லை 
போர்க்களம் உன்னுடையதா 
என்பதுதான் முக்கியம்..... 
ஏன் என்றால் வெற்றிக்கு 
போர்க்களம் தான் தேவை.

ஜன்னல்களை யாசித்தேன் 
உன் சுவாசக் காற்றை 
தென்றலில் இழைத்து 
அழைத்து வரச்சொல்லி. 
வாசலுக்கு முத்தமிட்டேன் 
கதவுகளை காதலித்தேன் 
உன் வரவை எதிர்பார்த்து. 
அழைப்பு மணியை கட்டிக் கொண்டேன் 
நீ வருவதை அது எனக்கு அறிவிக்குமென்று... 
எப்போது வருவாய் அன்பு கண்ணம்மா?

எங்கோ தொலை தூரத்தில் இருந்து 
நீ விடும் மூச்சுக் காற்றை 
வாங்கி நான் இங்கு மூச்சு 
விடுகிறேன் என்பதை 
அறிவாயா நீ? 
என் உயிர் அணுக்கள் ஒவ்வொன்றும் 
உன்னை தேடி 
ஒவ்வொரு வீதியாக அலைவது 
உனக்கு தெரியுமா? 
எங்காவது ஒரு 
என்னுடைய 
பார்வையில் நீ தென்படுவாயா 
என்று தேடி தேடி 
என் விழிகள் செத்து வருவது 
உனக்கு தெரியுமா....... 
உளறவில்லை.....நான் 
உண்மையை சொல்கிறேன் 
என்பதாவது 
உனக்கு தெரியுமா?????
புரிந்திவிட்டிருந்தால்
எனக்குமட்டும் ஏன்
இத்தனைக் கஷ்டம்..... 

என் மன சுமையை 
உன் பரந்த தோளில் 
இறக்கி வைக்க நினைத்து 
நான் உன்னை பார்த்த போது, 
உன் முகத்தின் கடுமை, 
என் நினைப்பை 
ஓட ஓட விரட்டியடித்தது. 
என்ன ஒரு வேதனை?

Wednesday 26 June 2013

இதுதான் காதல்நோய்

அன்றிரவு அதிகாலை ஆழ்ந்த ஒரு கனவு. கனவில் நீ. சும்மாயிருக்க வேண்டியதுதானே. ஒரே சீண்டல்கள். அதாவது விடிகாலை எப்பொழுதும் கதவைத் திறப்பதுபோல கதவைத் திறந்தால், நீ வாசலில், உலகத்தின் சந்தோஷங்கள் அனைத்தையும் உன் கண்ணுக்குள் தேக்கிவைத்துக்கொண்டு. அந்தநாள் வீட்டில் தோழிவேறு இல்லை. அவள் ஒரு உறவின் திருமணத்திற்கு சென்றுவிட்டாள்.  உன் முகத்தின் பொழிவு, என்னை மிகவும் பயமுறுத்தி, கலவரத்துடன் துன்புறுத்தத் துவங்கிவிட்டது. என்னை கற்பழித்துவிடுவாயோ என்றொரு நடுக்கம். அது முற்றிலும் கிடைத்திட முடியாத இன்பமான இம்சைகள். உள்ளே நீ வந்தவுடன் சொல்கிறாய், உலகத்தை முழுவதும் துறந்து மொத்தமாய் உன்னிடமே வந்துவிட்டேன் என்று. நீ உன் அரிபறிகளை முடித்து சோபாவில் வந்து கால்மேல்கால் போட்டுக்கொண்டு அப்பாடாவென அமர்கிறாய். உன்கால்களின் முட்டுப்பகுதிவரை உனக்கு அடங்காமல் வெளியே துறுத்தித் தெரிகிறது.  நான் உனக்கு என்திறமையின் வழிப்படி மிகவும் ருசியான மாஞ்சோலை டீயை போட்டெடுத்து தருகிறேன். நானும் உன்னருகில் அமர்ந்துகொள்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்டே அந்த டீயை மிகவும் ருசித்துப் பருகுகிறாய். என்ன நினைத்தாயோ எனக்கு நான் வைத்திருந்த டீயையும் உன்கையிலெடுத்து ஒரு உறுஞ்சு உறுஞ்சி அப்படியே என் வாய்க்குள் அதை செலுத்துகிறாய் என்னை கட்டியணைத்துக்கொண்டு . மலைப்பாம்பு இரையை இறுக்குதல்போல், இறுக்கிய அணைப்பால் என் மூச்சு முட்டிடச் செய்கிறாய் வாயை எடுக்காமலேயே.  உன் சேலை முழுமையாய் விலகிடுவதையும் நீ உணரவில்லை. என்முகத்தில் அழுத்திக்கிடந்த அந்த பருவமெத்தைகள், கால்களை பின்னிக்கிடந்த அந்தக்கால்கள். மூச்சு முட்டியது. உடல் நெருப்பால் பரவியது. தப்பவழியில்லை என்பதை உணரும்வேளை, கதவு தட்டப்படும் ஓசைகேட்க, பட்டென விழித்தேன். மணி 2ஐக் காட்டி சிரித்தது. உன்நினைவு மேலோங்க, நெட்டில் பதுக்கி வைத்திருந்த  உன் படங்களையெல்லாம் பார்த்து ரசித்து, துக்கம் மறைத்து, தூக்கம் மறந்து, உன்னழகில் திளைத்து, உன்னை தியானித்து அப்படியே கிடந்தேன். உறக்கம் வெறுத்தது மனம்.
தியான வாழ்வு, கனவுகளை துளியும் சிதைக்காமல் அப்படியே மூளையின் நினைவுக்குழிக்குள் பதுக்கி வைத்துக்கொள்கிறது. சரி டிவி பார்க்கலாமென ஆன்செய்தால், அங்கு சுதாரெகுனாதனின் இறையுணர்த்தும் கீர்த்தனைகள். அவளும் உன்போலவே வடிவாக இருப்பாள். நானென்ன செய்ய? குளிக்கச் செல்லும்வேளை, நாம் சேர்ந்து அந்த மணிமுத்தாறு சுனையில் குளித்தது  நினைவில்வந்து ஒட்டிக்கொண்டு உன்னழகைக்காட்டிக் காட்டி வாட்டியது.  உன்னிடம் குற்றாலத்தில் கடுமையான வார்த்தைகளில் பேசியது, முன்வந்து என்னைக் குற்றவாளியாக ஆக்கிடத் தீர்மானித்தது. மதிய உணவுமுடித்து ஆசுவாசமாக அமர்ந்தபொழுது, அன்றொருநாள் முதல்முதலாய் நேருக்குநேர் அமர்ந்திருந்த உன் கண்களில் நான் கண்ட அந்த காதலும், அது உணர்த்திய விதமும், உண்மையாகவாவென்று என்கண்களால் நான் கேட்க, நீ  தொடர்ந்து உன் அந்த அழகிய புன்னகையை வழியவிட்டு ஆமாம் என்றது. மாலையில் அலைந்த இனிய தென்றலை அனுபவித்து நிற்கும்வேளை, நீ உருவாக்கிய  உன் அந்த இரவின் அநியாயங்கள் ஒன்றுவிடாமல் என் சிந்தனையில் பூக்க, சிலிர்ப்புற்ற என் இளமையின் கூச்சலை கட்டுப்படுத்தவே முடியாமல்தான் கிடந்தேன். மொத்தமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு அன்று வெளிநாடு செல்லக் கிளம்பியவேளை எதிர்பாராசமயம் நீ கொண்டுதந்த அந்த நீர், என்ன நீரா? அது உன் அன்பினில் விளைந்த அமுதநீரல்லவா! இன்றுவரை என்னைக் கொல்லாமல் கொன்று தீர்க்கும் காதல் நீரல்லவா! இப்படியே உன்நினைவுதான் அன்று முழுமைக்கும். உண்மையிலேயே அன்றுதான் உண்மையான காதல்நோயை உணர்ந்து கண்டுகொண்டேன்.
நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், படுத்தாலும், கனவிலும், நனவிலும், உணவிலும், உணர்விலும், உள்ளத்திலும்  உண்மையாய், எந்தன் விடிவெள்ளியாய் பூத்துக்கிடந்தது நீ, நீமட்டுமே அன்றுமுழுவதும்.
அன்றுமுழுவதுமே இரவு உட்பட உன்பற்றிய வெறித்தனமான உன் நினைவுகளிலேயே கழிந்தது.

Tuesday 25 June 2013

சுவைகளும் உடல்தொடர்புகளும்

அறுசுவைகள். அவை புளிப்பு, கசப்பு - துவர்ப்பு, காரம், உப்பு, இனிப்பு ஆகியவை. இதில் கசப்பும் துவர்ப்பும் ஒரே நிலையில் செயல்படுபவை. மற்றும் முறையே ஐம்பூதங்களின் ( ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் அல்லது நிலம். ) சம்பந்தம் கொண்டவை.
சுவைகள், காந்தத் தன்மாற்றம் அடையக்கூடியவை. அவை நாவில் பட்டவுடன் உடலில் காந்தமாக உறுமாற்றப்பட்டு பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவைகள் சிலபல உடலுறுப்புகளுடனும் நேரடித் தொடர்பு கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் சில சுவைகளை மனம் விரும்பாது. அந்த நேரம் அந்த சுவையினால் ஏற்படும் ஷக்தி உடலில் நிரம்பியிருப்பதே அதற்குக் காரணம். அந்த உறுப்புகளின் செயல்திறன் பாதிக்கப்பட்டு அந்த உறுப்புகள் சோர்வாகக் கருதப்படும்வேளை அந்த சுவையுள்ள உணவினை உட்கொள்ளும்பொழுது அந்த உறுப்புகள் உற்சாகம் பெறுகின்றன.  அதற்காகவே நம் முன்னோர்கள் ஒவ்வொருநாளும் ஒரு வேளையாயினும் அறுசுவை உணவு உண்ண வழிவகை செய்திருக்கின்றனர்.
புளிப்பு :
இது உடலின்  ஐம்புலங்களில் ஆகாயம் ( வெற்றிடம் ) - பிராணசக்தியாக செயல்படுகிறது.. ஆன்மபலம் கொண்டது. இந்த சக்தி குறையும்பொழுது நரம்புகளின் குறைபாடுகள் ஏற்படும்.
உடலுறுப்பில் கல்லீரல், கண்கள், பித்தப்பை, இவற்றில் நேரடியாக தொடர்புள்ளவை. கோப உணர்ச்சிக்குக் காரணமானது.
களுத்துக்கு மேலுள்ள கண்களும் கீழுள்ள கல்லீரலும் ஒரே உருவ அமைப்புக் கொண்டவை.
( பொதுவாக களுத்துப்பகுதி இறந்த ஆவியுலகையும், மேலுள்ள தலைப்பகுதி   இறைத்தன்மையின் வழிகாட்டலையும், கீழ்ப்பகுதி நிகழ்கால நடவடிக்கைகளையும், உடல் மற்றும் மனம் கொண்டிருக்கும் நிலைகளையும் குறிக்கும். )
காரம் :
ஐம்புலங்களில் காற்று ( வெற்றிடத்தினைவிடவும் கணமானது ) - பிராணசக்தியாகக் கொண்டது. துக்க உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதில் ஒருவருக்கு பிரச்சனை ஏற்பட்டால் காரம் அதிகமாக உட்கொண்டால் மலச்சிக்கல் போயேபோய்விடும்.
உடலுறுப்பில் நுரையீரல், மூக்கு, பெருங்குடல் இவைகளில் தொடர்புள்ளவை. நுரையீரலும் மூக்கும் ஒரே தோற்ற அமைப்புகொண்டவை.
கசப்பு & துவர்ப்பு :
ஐம்புலங்களில் நெருப்பு ( காற்றின் தன்மையை ஒத்தது ) - பிராணசக்தியாக கொண்டது. மனதில் சந்தோஷ உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியது. ரத்தக்கொதிப்பை அடக்கவல்லது. ஒரு பாம்புக் கடித்தால் கசப்பான வேப்பிலைகளை வாயில் கசப்புத்தன்மை வரும்வரை மென்றால் பாம்பின் விஷத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குப்பின் காப்பாற்றிவிடலாம். கசப்பு மற்றும் துவர்ப்பான உணவை விரும்பி உண்பவர்களுக்கு பெரும்பாலும் இருதயம் தொடர்பான வியாதிகள் வருவதில்லை.
உடலுறுப்பில் இதயம், சிறுகுடல், நாக்கு இவற்றில் நேரடித் தொடர்புள்ளவை.
இதயமும் நாக்கும் ஒரே தொற்றம் கொண்டவை.
உப்பு :
ஐம்புலங்களில் நீர் ( காற்றையும் நெருப்பையும்விட கணமானது. ) - பிராணசக்தியாகக் கொண்டது. மனதில் பயவுணர்வுகளை ஏற்படுதுவது. திருட்டு, பொய், ஏமாற்று, அநியாயங்களில் ஈடுபடுவோர் உப்பை மொத்தமாகத் தவிர்பது நலம்.
உடலுறுப்பில் சிறுனீரகம், மூத்திரப்பை, காது இவைகளில் நேரடியாக தொடர்புள்ளவை. சிறுநீரகமும் காதுகளும் ஒரே தோற்றமுள்ளவை.
இனிப்பு :
ஐம்புலங்களில் மண் அல்லது நிலம் ( எல்லாவற்றையும்விட கணம் மிகுந்தது.) - பிராணசக்தியாக கொண்டது. மனதில் கவலைகளை ஏற்படுத்தவல்லது. எந்தவேலையாயினும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்துமுடிப்பின் கவலையில்லை. இனிப்பை விரும்பி உண்பவர்களுக்கு வயிற்றுப்பிரச்சனைகள் வருவதில்லை.
உடலுறுப்பில் இரைப்பை, மண்ணீரல், உதடுகள் இவற்றில் தொடர்புகொண்டவை. மண்ணீரலும் உதடுகளும் ஒரே தோற்றமுடையவை.

நோய்கள் உண்டாகக் காரணங்கள்:

நம்முடல் தினம்தினம் கோடிக்கணக்கான செல்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் கோடிக்கணக்கான செல்கள் அழிகின்றன. அந்த அழிந்த செல்களை அப்புறப்படுத்தி, புதிய செல்களை உருவாக்க வேண்டிய சத்துக்களை உணவின் மூலம்பெற்று செல்களுக்கு கொண்டுசெல்லும் முக்கியமான வேலையை ரத்தம் செய்கிறது. ஆக நம் உடலுக்கு ரத்தமே பிரதானம். ரத்தம் கெட்டாலோ, அவைகளைக் கொண்டுசெல்லும் வேலையை அது சரிவர செய்யமுடியாவிட்டாலோ, தடை ஏற்பட்டாலோ ஒரு துயரம் உண்டாகிறது. ஒரு மின்காந்த இழப்பு உண்டாகிறது.  அதுவே நோயாக கருதப்படுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

நோய்க்கான அடிப்படைக் காரணங்கள்:

1. ரத்தத்தின் பொருட்களின் தரம் குறைதல்..... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
2. ரத்தம் அளவில் குறைதல்...... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
3. ரத்தத்தின் பொருட்களின் அளவு குறைதல்....... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
4. செல்களின் உற்பத்தி செய்யும் திறன் குறைதல்....... நாம் உட்கொள்ளும் உணவால் ஏற்படும் குறை. உணவுமுறை மாற்றம் அவசியம்.
5. மனதில் ஏற்படும் பாதிப்புகள்...... நடைமுறையில் வேலைகளை சரியான திட்டமிடலில் செயல்படுத்துவது. உள்மனம் சொல்வதைக் கேட்டு அதன்படி லயத்துடன் நடப்பது. சுவைகளினால் மாற்றமடைவது.
6. புத்தி கெட்டு போய்விடுதல்..... தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
7. ஆழ்மனப் பதிவுகளின் தாக்கங்கள்...... தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
8. ஆன்ம சக்தி குறைதல்......... தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
9. நம்மைச் சுற்றி அமைந்திருக்கும் ஆராவின் வீரியம் குறைதல்........ தியானம், சுவைகளினால் மாற்றமடைவது.
10.பஞ்சபூதங்களின் தன்மைகள் குறைதல்....... சுவைகளினால் மாற்றமடைவது.
11. பிறப்பிலேயே கொண்டுள்ள குறைபாடுகள்....... தியானம், இறைவனைத் தொழுதல்.
12.பரம்பறை விஷயங்களால் ஏற்படும் குறைகள்....... தியானம், இறைவனைத் தொழுதல்.
இவைகளால் மட்டுமே நோய் ஏற்படமுடியும். இவைதவிர்த்து வேறெந்த காரணங்களும் இருந்திட முடியாது. இவைகளில் சிலவற்றை ஆன்மீகமும் தியானமுமே வழிநடத்தி சரிசெய்திட முடியும். ஆனால் பலவற்றை உணவின் மூலமும் அதன் முறைகள் மூலமும் சரி செய்திட முடியும்.

உணவுகள் :

பச்சையான இயற்கை உணவுவகைகள், பழங்கள், சமைக்காத தேங்காய்ப்பொருட்கள், வெள்ளரி, கேரட் போன்ற பச்சையாக உண்ண சுவையாக இருக்கும் பொருட்கள் முதலிடம் பெருகின்றன.
பச்சையாக சாப்பிடமுடியாத முளைகட்டிய பயறுவகைகள், தானியங்கள், சுவையற்ற பழங்கள், காய்கள் இவற்றால் கொண்ட உணவுகள், 2மிடம் பெரும் உணவுவகைகள்.
சமைத்த சைவ உணவுவகைகள், கீரை, சாதம், சப்பாத்தி முதலானவைகள் மற்றும் மீன் உணவுவகைகள், 3ஆமிடம்.
மற்றெல்லா அசைவவகை உணவுகள் 4மிடம்.
டீ, காப்பி, பாட்டில் பான உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள், பீடா, பாக்கு, புகையிலை போன்றவைகள், மதுவகைகள் 5மிடம். பொதுவாக இவைகள் தவிர்க்கப்பட வேண்டியவைகள்.


உணவுமுறையில் கவனிக்கவேண்டியவை:

உணவு உண்ணுமிடம் சுத்தமாகவும், சத்தமின்றியும், கவனம் மாறாததாகவும், அவசரமின்றி அமர்ந்து கொள்ளத்தக்கதூவுமாக இருக்கவேண்டும்.
நன்றாக பசியெடுத்தபின் மட்டுமே உணவை உட்கொள்ளவேண்டும். நேரம் பற்றி கவலைகொள்ளக்கூடாது.
உணவு உட்கொள்ளும் முன்னோ, உணவின்பொழுது இடையிலோ நீர் அருந்துதல்கூடாது. அது வயிற்றின் செமிக்கும் திறனை பாதிக்கும்.
உணவு உட்கொள்ளும்வேளை எடுக்கும் கவளம் நம் பற்களால் நன்கு மெல்லப்பட்டு கூழாக்கி முழுவதும் உமிழ்நீரால் கலக்கப்பெற்று பின்னரே விழுங்கிட வேண்டும். அவசரமாக உண்ணுதல்கூடாது.
உட்கொள்ளும்பொழுது உணவின் சுவையை நன்கு அனுபவித்துச் சுவைத்து உண்ணவேண்டும். முழுக்கவனமும் உணவிலேயே இருந்திடல் வேண்டும்.
உணவு உட்கொண்டபின் தாகம் எடுத்தபின்னரே தண்ணீர் பருகிடல்வேண்டும். தவிக்காமல் எப்பொழுதுமே தண்ணீர் பருகுதல்வேண்டாம்.
மனமும் நாக்கும்தான் நமக்கு மருத்துவர். ஆதலால் நாக்கு சுவைத்திட விரும்பும் அனைத்தையும் முறைப்படி வேண்டுமட்டும் சாப்பிடலாம்.
தரையில் அமர்ந்து சம்மணமிட்டு உணவு உட்கொள்ளுதல் மிகவும் நலம்.
குளித்தபின்னர் அரைமணி கழித்து அதபிந்தான் உணவுகொள்ளுதல் வேண்டும். அதுபோல உணவுக்குப்பின் 2 மணிநேரம் கழித்துத்தான் குளித்திடல் வேண்டும்.
மூன்றுவேளை உணவில் ஒருவேளையாவது அறுசுவை உணவாக அது இருந்திடல் வேண்டும். முன்னர் கண்ட ஆறு சுவைகளும் கொண்ட உணவு வகைகள் அது.
உணவில் இனிப்பை முதலிலேயே சுவைத்திடல் வேண்டும்.
மண்பானை நீரே மிகவும் சிறந்தது. அதில்தான் அதிகமான பிராணவாயு கலந்திருக்கும். பாட்டில்ட் தண்ணீரை பெரும்பாலும் தவிர்த்திடல் வேண்டும். நீரை அருந்தும்பொழுது அதன் சுவையை நன்கு ரசித்துப் பருகவேண்டும். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் அவசியம். ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்ததும் நீர் அருந்துதல் அவசியம்.
சுத்தமான இயற்கைக் காற்றை சுவாசித்தல் மிகமிக அவசியம். ஏசியினை பெரும்பாலும் தவிர்க்கவேண்டும். கொசுவர்த்திச் சுருள் போன்றவைகள் கூடவேகூடாது. அவைகள் கொசுவைவிடவும் ஆபத்தானவைகள்.
ஒருநாளைக்கு 6 மணிநேர உறக்கம் அவசியமானது. கைகால்களை நீட்டி தளர்வாகப இடையூறின்றிப் படுத்து உறங்குதல் நலம். இரவு உணவுக்குப்பின் 2 மணிநேரம் அமைதியாக மொட்டைமாடியிலோ, காற்றோட்டமான ஒரு இடத்திலோ அமர்ந்திருந்தபின் உறங்கச் செல்லலாம்.

இந்த வகைகளில் நம் வாழ்க்கை முறை அமைந்தால் நோயற்ற வாழ்க்கையாக அது அமையப்பெறும்.

Monday 24 June 2013

அருகில் வந்தால் இல்லையென்கிறாய்

நான் என் மனதில் ஒரு இனிமையான தாலாட்டினை உணர்ந்தது அன்றுதான். உன்னைப் பார்க்கவென்றே உன்னிடம் நான் வந்திருந்தபொழுது, உன்னோடு செல்லில் பேசினபொழுதெல்லாம் நீ எடுக்காததால், சில கருத்துக்களை எஸெமெஸ்ஸில் உன் செல்லுக்கு அனுப்பினேன். வழக்கம்போல நீ எந்த பதிலும் தரவில்லை. ஒருபுறம் பயம். எங்கே நீ யாரிடமும் இதை சொல்லிவிடுவாயோ என்றொரு கலக்கம். குழப்பமானால் என்ன செய்திடவேண்டும் என்றும் நான் யோசித்திருக்கவில்லை. மாட்டிவிட்டிருந்தாயானால், கிழிந்தது க்ரிஷ்ணகிரிதான். அந்த நாளுக்குப்பின் நாம் அனைவரும் ஒரு திருமணத்திற்கு வேறு செல்லவேண்டியதிருந்தது. அதற்காக சில உடுப்புகள் பார்க்கக் கிளம்பினோம். நீயும் வரப்போவதாக எல்லொரும் சொன்னதும்தான் மிகவும் திருப்தியானது. நீ யாரிடமும் பத்தவைக்கவில்லை என்ற திருப்தி. என்ன உடனேயே கோபமா? எனக்கு பொய்சொல்லப் பிடிக்காது. அங்கு போய் சேர்ந்ததும் உன் முகத்தைத்தான் முதலில் தேடிநின்றேன். வேண்டுமென்றே நான் உன்னைத் தேடிடவேண்டும் என்பதற்காகவே எங்கே உள்ளேயே மறைந்துகொண்டு என்னை, உன்னை தேடவிட்டாய். சிலநிமிடங்கள் கழித்து நீ என்முன் உன் வேலைநேர உடையுடன் தென்பட்டதும் மிகுந்த காதலில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். உன்னோடு என்னை உரசிக்கொள்ளவும் முடிந்தால் முத்தமிட்டுவிடவும் துடித்தேன். உன்கண்களிலுமே அதே விருப்ப அலைகளை நான் கண்டேன். மனம் இருப்புக் கொள்ளவில்லை. நீயும் கொஞ்சம் தொலைவில் உள்ள பகுதியில் நின்றுகொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய். நானும் உன்னருகில் வந்திட என்னவெல்லாமோ செய்து முயற்சித்தேன். ஆனாலும் நம் உறவுகள் அருகில் இருந்துகொண்டு சந்தேகப் பார்வைகளை நம் மீது வீசத் துவங்கியதால் அந்தக் கடையைவிட்டு வேறொரு கடைக்குச் செல்வதுபோல சென்றுவிட்டேன். மறுபடியும் வேறுவழியின்றி இன்னொரு அருமையான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டேன். அன்று வீட்டிற்கு சென்றபின்னும் மிகுந்த காதல் காய்ச்சலில் உழன்றேன். கண்முன் கட்டளையிடுகின்றாய். கருத்தொருமித்து அருகில்வந்தால் ஓடிவிடுகின்றாய்.

அது ஒரு ஆன்மக்காதல்

அவள் அவனின் அறிவுருத்தலின்படி இந்தமுறை 48நாட்கள் மண்டலபூஜை செய்திருந்தாள். கணவனுடன் இருந்துகொண்டு ஒருவருக்கும் தெரியாமல் மண்டலபூஜை இருப்பது என்பது மிகவும் கடினம். கணவனுடன் உறவுகொள்ளும்பொழுது உச்சனிலை அனுபவித்திடக்கூடாது. அதுதான் பிரச்சனையே. அவள் உறவுகொள்ளும்வேளை அவனை மனதில் நினைத்துக்கொண்டுதான் இருப்பாள். அப்படியானால் மட்டுமே அவளால் உச்சனிலையை அனுபவிக்க முடியும். இப்பொழுது மண்டல்பூஜையின்பொழுது அவனை நினைத்திடமுடியாது. அது ஒரு தவம். அவனை நினைத்திடாமல் இருக்க அவள் உறவின்போது மனதை ப்லேங்க்காக வைத்துக்கொண்டாள். பூஜை எல்லாமும் முடிந்து ஊருக்குக் கிளம்பும் நாள் மிகவும் இன்பமாகவே இருந்தது. முழுமைக்கும் அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். ஏறியதுதான் தெரியும் ஊர் வந்துவிட்டது. இறங்கிவிட்டாள்.
ஸ்டேஷனில் அவனும் அவளை வரவேற்க வந்துவிட்டான். நட்புக்காதல் படுத்தும்பாடு. ( நட்புக்காதல், ஆன்மக்காதல் எல்லாம் ஒன்றுதான். கலவி அற்ற காந்தஉரசல் மட்டும் கொண்ட காதல். அங்கு எந்த இழப்புமில்லை. ) கண்களின் கலப்பு, அதன் மொழியுரைப்பு, இன்பம், கொஞ்சம் வெட்கம், அழகின் ஈர்ப்பு, செழுமையின் மயக்கம், சிந்தனையற்ற தனிமையின் தவிப்பு, காலநிலையற்ற உணர்வலைகள் எல்லாமும் இணைந்து செயல்படத் துவங்கும் வேதனை.
2 நாட்கள் சொந்தங்களை பார்த்துக் களித்து, முடித்து குற்றாலம் விழாவுக்குச் செல்லக்கிளம்பினாள். ரயில் பயணங்களெல்லாம் முடிந்து, குற்றாலத்தில் எல்லொரும் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதியின் தனக்கு ஒதுக்கப்பட்ட காட்டேஜுக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்கென தனியறை வேண்டுமென முன்கூட்டியே சொல்லியிருந்தாள். அங்குதான் அவனும் மூன்றாம் மாடியிலுள்ள அறையில் தங்கிடப் போவதாக தகவல் தந்திருந்தான். அதனால் அந்த 3 ஆம் மாடியை நோட்டமிட்டாள். ஒருவரும் தெரியவில்லை. முதல் நாள் உறவுகளுடன் அரட்டையில் கழிந்தது. அன்றிரவு தூக்கம் கொள்ளவில்லை. இரவு மணி 12. மொத்த விடுதியும் அடங்கியிருந்தது. பெரும்பாலும் அந்த விழாவுக்கு வந்தவர்கள்தான். அது குற்றால சீசன் இல்லாத நாட்கள். டிசம்பர் பூக்களின் வாசம் வீசியது. இன்னமும் அவனை சந்திக்கவில்லை. எழுந்து வெளியில் நின்றுகொண்டு பார்த்தாள். 3ஆம் மாடியில் ஒரு கையசைவது தெரிந்தது. அவனாகத்தான் இருக்குமென சுற்றுமுற்றும் யாரும் தெரிகிறார்களாவென பார்த்தாள். ஒருவருமே இல்லை. கையையாட்டிய திசைநோக்கி அவனிடம் சைகையில் அவனை இங்கு வருமாறு அழைத்தாள். உடனேயே அவளின் அறைக்குள் நுழைந்துகொண்டாள். அவன் அமைதியாக யாரும் அவனைக் கண்டுகொள்ளாவண்ணம் அந்த அறைக்கு வந்து, உள்ளே நுழைந்தான். இப்பொழுது அவனும் அவளும் மட்டுமே அந்த அறையில் இருந்தனர். அவள் மெத்தையில் அமர்ந்திருந்தாள். கும்மிருட்டு. சன்னல்களனைத்தும் மூடப்பட்டு இருந்தன. குற்றால குளிர்ந்த காற்று அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றது. அதையடக்கி அந்தக் கதவினை அடைத்தான். அந்தக் காட்டேஜில் பின்புறம் ஒரு கதவு ஒன்று இருப்பதையும் கண்டுகொண்டான்.
அவளருகில் சென்று அவளின் மிருதுவான கைகளைப்பற்றி விரல்களினூடே தன் விரல்களை நுழைத்து வருடினான். அவள் கொஞ்சம் வெதுவெதுவென பஞ்சுபோல இருந்தாள். ஒன்றும் பேசவில்லை. பேசிடவும் ஒன்றுமில்லை. அவள் எழுந்து மெத்தையின் விளிம்புக்குவந்து கால்களை கீழே தொங்கவிட்டு வாகாக அமர்ந்து, அவனின் வயிற்றுப் பகுதியில் தலை சாய்ந்தாள். அவன் அப்படியே தரையில் முட்டியிட்டு அவளின் தொடைகளை வளைத்து இருக அணைத்து மடியினுள் முகம் நுழைந்தான். அவள் பின்புறமாக அப்படியே கால்களைத் தொங்கவிட்டவாறே படுத்தாள். பின் அவன் மெதுவாக மேலேறி முகத்தாலும் உதடுகளாலும் அடிவயிறு, வயிறு,  இன்னபிற பகுதிகளையும் கடந்து இதழ்களை அடைந்தான். ஆழ்ந்த முத்தத்தில் மயக்கமுற்று அதிலிருந்து மீளவழியின்றி அதிலேயே மூழ்கினர். முத்தமொன்று மட்டும் காதலியானால் எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் அனுபவித்துக் கிடக்கலாம். திகட்டுவதில்லை. பின் ஒருவாறு எழுந்து ஆன்மக்காதல் புரிய தயாராயினர். ( ஆன்மக்காதல் என்பது, அவன், அவளின் ஆடைகள் அனைத்தையும் அமைதியாக ரசித்து அகற்றவேண்டும். பிடித்த இடங்களை பிடித்தபொழுது சுவைதிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம், ஆனால் செக்சில் ஈடுபட்டுவிடக்கூடாது. மற்றதற்கு அனுமதி தேவையில்லை. பின்னர் அவள், அவனின் உடைகளை. )
அவன் படுக்கையில் அவளைப் பின்புறமாக இழுத்து அணைத்துக்கொண்டு அவள் முகம்திருப்பி முத்தமிட்டுக்கொண்டே அவைகளை ஒவ்வொன்றாக நிதானமாக அகற்றினான்.  மேலாடையினைக் கலைத்ததும் அந்தப் பஞ்சுப்பகுதியினைக் கொண்டாட விரும்பி அதை முடிந்ததெல்லாம் செய்தான். பிடித்து இழுக்க முனைந்தான். முடிந்தமட்டும் அழுத்தி நெஞ்சாங்கூட்டினுள் நுழைக்க முயன்றான். அதற்கு அது உடன்படவில்லை. பின் கீழுடுப்புகளை கலையும்பொழுது அவைகளினுள் அமைதியாக முகம் புதைத்து கிடந்தான். அந்த சூடு அவனில் பரவி ஒரு புதிய உலகத்தை அவனுக்கு காட்டியது. வந்துவிழுந்த அந்த இன்ப அருவியை அவனின் ஒவ்வொரு உடல் உயிரணுவிலும் பரப்பி, அவைகளையும் இன்பத்தால் துடிக்கச் செய்தான். இப்பொழுது அவனின் உதடுகள் படாமல் அவளின் எந்தப் பகுதியுமில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு அவளுக்கு வழிவிட்டான், அவளின் டெர்னுக்காக. அவளும் அவளுக்குப் பிடித்த அனைத்தையும் செய்து அனுபவித்தாள். முடிவில் அப்படியே மார்பில் சரிந்தாள். அணைப்பின் உதவியாலும், முத்தத்தின் ஆழுமையாலும், இடைவெளியின்றித் தழுவி தங்களின் உடல்கள் கொண்டிருக்கும் மொத்த காந்த சக்தியையும் வெளிக்கொணர்ந்து, அவளினுடையதை இவனின்னுடௌயதில் கலந்து, இருவரும் ஒருவரயினர். அவன் அவள்மேல் முழுமையாய் படர்ந்து முத்தத்தின்மூலம் அவனின் தேன் அனைத்தையும் அவளின் தேனுடன் கலந்து அதை முறைவைத்து அருந்தினர். கிறக்கம் கூடக்கூட அவள் விரிந்து ஈரமாகி அவனுக்கு வழிகொடுத்தாள். அவனும் இயக்கமின்றி வளர்ந்து உள்சென்று தேன்கலப்புகொண்டு கிடந்தனர். இருவரும் ஏற்பட்ட காந்தக் கலப்பினால் அந்த காந்தக் குவியலால் இன்பம் அனுபவித்தனர். அவள் அவனினுள்ளும், அவள் அவனினுள்ளும் ஜீவகாந்தத்தினால் புகுந்துபுகுந்து இன்பம் பரப்பி விளையாடி மகிழ்ந்தனர். அவளின் உணர்வுகளால் அவள் செக்ஸ் இன்பம் பெற துடிப்பது தெரிந்தது. ஆனாலும் ஆன்மக்காதலில் செக்ஸுக்கு இடமில்லையென்பதை உணர்ந்து அவன் வாழாவிருந்தான். ஆனாலும் ஆன்மக்காதலின் முடிவில்லா இன்பத்தை இடைவெளியின்றி அனுபவித்தனர். செக்ஸ் இன்பம் எல்லைகள் கொண்டது. இழப்பும் கொண்டது. செக்ஸுக்குப்பின் இன்பமும் முடிவுரும்னிலைக்கு செல்லும். ஆன்மக்காதலில் 24 மணிநேரமும் இன்பம் அனுபவித்துக்கொண்டே இருக்கலாம். எத்தனை முறைவேண்டுமானாலும் அனுபவிக்கலாம். மணி 5. அவன், அவனை அவளிடமிருந்து பிய்த்து எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தான். அவள் விருப்பமின்றிதான் அவன் அங்கிருந்து கிளம்பினான். அவளுக்கு அந்த இன்பநிலையிலிருந்து வெளிவர விருப்பமின்றி படுத்தேகிடந்தாள். இரவு ஒருநிமிடத்தில் முடிந்துவிட்டதுபோல் உணர்ந்தாள். மீண்டும் 2 இரவுகள் இது தொடர்ந்தது. கொஞ்சம் வித்தியாசமாக அது இருப்பினும் அவளுக்கு மிகவும் விருப்பமாக இருந்தது. அவனை நினைத்தபொழுதெல்லாம் இன்பம் உடல்முழுவதும் பரவுவதை உணர்ந்தாள். அதுதான் தியானமோ என திகைத்தாள். கனவிலும், நினைவிலும், உணர்விலும், உடலிலும் பரவிக்கொண்டது, தடையில்லா இன்பம் கொடுத்து. ஆனாலும் செக்ஸுக்காக ஏங்கினாள்.
செக்ஸ் தவறல்ல. அதை எப்பொழுது செய்திடலாம் என நமது முனிவர்கள் வரையருத்திருக்கின்றார்கள். முக்கியமாக அகத்திய மாமுனிவரின் அறிவுரையை இங்கு காணலாம். அதாவது பெண் தன் விலக்குநாட்கள் கழிந்து 8வதுநாள் அவளின் கருமுட்டை வெளிவரும் அந்த 3 நாட்கள், கலவி கொண்டால் அதுதான் தெய்வீகமானது என்கிறார். முனிவர்கள், தேவர்கள், முதலான தியானத்தினை நன்கு உணர்ந்தவர்கள் அனைவரும் அவ்வாறே செயல்படுகிறார்கள். அது இழப்பு இல்லாதது. மேலும் ஆன்மபலத்தைக் கொடுக்கக்கூடியது. அன்பினால் செய்யப்பட்டது.
அதுவும் எப்படிச் செய்யவேண்டுமாம், அந்த நாளை சரியாக கணித்துக்கொண்டு அந்த இரவில், எந்த வெளிச்சமுமின்றி, நிர்வாணாவில், முத்தம் முழுமைபெற்ற நிலையில் பெண் முட்டியிட்டுக் குனிந்தும் ஆண் நின்றுகொண்டும் பின்புறமாக கலவியில் ஈடுபடுதல் வேண்டும். அதன்பின் விந்துநாதத்தை கழுவிடல் கூடாது. பின் அவளுடன் அருகருகே படுத்துக்கொண்டு உடலை ஒருவருக்கொருவர் வருட வேண்டும். அவளின் உடல் உறுப்பு மறுபடியும் கதகதப்பானதும் இயற்கையாக 2ம் முறை கலவிக்கு உடல் துடிக்கும். இப்பொழுது அந்த முதலின் திரவத்தினை துடைத்திடாமலேயே 2ம் கலவி விரும்பிய முறையில் படுத்துக்கொண்டு செய்திடல் வேண்டும். கலவி முடியும்வேளை, முதலில் கலவிகொண்டு கலந்திட்ட விந்துநாதம், இருவரின் உடலினுள்ளும் நுழைந்து ரத்தத்தில் கலந்திடும். அதுதான் இறைசொல்லும் ஆன்மக்கலவி. தியானம் நிரம்பியது. துடிதுடிக்கும் இன்பம் கொண்டது. இதன்பின் உடலுக்கும் ஷக்தி இழப்பு இல்லை. இதில் கட்டாயம் கரு உற்பத்தி நிச்சயம், ஆகவே அதையும் நினைவில் கொள்தல் வேண்டும்.
அவளுக்கு அந்த நாளுக்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதாக அவனின் காதுகளில் கிசுகிசுத்தாள்.

Saturday 22 June 2013

கொடூரத்தின் உச்சம்

http://www.vinavu.com/2011/07/07/desert-flower/

இந்தக்கட்டுரையை படித்துப்பாருங்கள்.

ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.

அவளின் இந்தக் கட்டுரையின் இந்தப்பகுதியை வாசிக்கும்பொழுது, என்னால் தனிமையில் தன்னைத்தானே குழுங்கிகுழுங்கி அழுவதை 15 நிமிடங்களுக்கு நிறுத்திட முடியவில்லை. கொடூரத்தின் உச்சம் இது. மனம் அடங்கிடவே மறுக்கிறது.

Friday 21 June 2013

நினைவில் தொழில்முறை 87

1987 ஆம் வருடம் தற்செயலாய் மாஞ்சோலை செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது ஒவ்வொரு வருடமும் புதுவருடம் துவங்கும்வேளை தொழிலில் அவர்களின் எல்லா வாடிக்கையாளர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லி புதுவருட டைரியை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவனே அதை முன்னின்று செயல்படுத்தத் துவங்கினான். மற்றெல்லா வாடிக்கையாளர்களையும் அவனே சென்று பார்த்தான். மாஞ்சோலை எஸ்டேட் மட்டும் அவனின் தகப்பனார் கவனிப்பதாக இருந்தது. அவன் அங்கு தனியே இதுவரை சென்றதேயில்லை.  இந்தமுறை அவனே அங்கும் சென்று முடித்துவிட முடிவானது. அவனும் சென்றான்.
அதிகாலை 3 மணிக்கு அந்த பஸ் கிளம்பும். அந்தக் காலங்களில் டவுன்பஸ் காலை 5க்குதான் செயல்படத்துவங்கும் என்பதால் முந்தயநாளே இரவு ஆட்டம் சினிமா ஏதேனும் பார்த்துவிட்டு அப்படியே பொடிநடையில் பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கு கடந்துசெல்லும் டிடிசி பஸ்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், மணி 3 ஆகிவிடும். உலகமே இருண்டாலும் மாஞ்சோலை செல்லும் அந்த பஸ்மட்டும் சரியான நேரத்திற்கு வந்து, கிளம்பிவிடும். 3.10 க்கு வந்தால் நிச்சயம் அந்த பஸ்ஸை தவறவிட்டிருப்பீர்கள். எங்குதான் நிற்பார்களோ தெரியாது, வந்துநின்ற மறுநிமிடம் அடிபுடியுடன் அத்தனைக் கூட்டமும் ஏறி கொண்டு பஸ் நிரம்பிடும். அப்புறம் ஸ்டாண்டிங்தான். நடைபாதைகளில் வரிசையாக மூட்டைகள் கிடக்கும். எல்லா பொருட்களும் கீழேயிருந்துதான் அங்கு சென்றிடவேண்டும். அவன் முதலில் ஏறிக்கொண்டு பஸ்ஸின் முன்கண்ணாடி அருகிலுள்ள சீட்டில் அமர்ந்துகொண்டான். அதுதான் வழியில் மிருகங்களை பார்த்துக்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பின் மணிமுத்தாறுவரை ஒரு குட்டித் தூக்கம். மலையேரும் இடம் நெருங்கியதும் வேடிக்கை பார்க்கத் துவங்கிடுவான். அந்த மலையே ஒரு அதியர்ப்புதம் நிறைந்ததுதான். மூலிகைகள் நிறைந்தது. மணிமுத்தாறு டேம் நீர் நிறைந்து கடல்போல் காட்சி தந்துகொண்டிருந்தது. அருவியிலும் அதிக அளவில் குளிக்கமுடியாதபடி நீர் கொட்டியது. வழியில் செந்நாய்களின் கூட்டம், யானைகளின் கூட்டம், மிளாக்களின் அழகிய அணிவகுப்பு என நிறைய பார்த்திருக்கிறான். ஒருமுறை காட்டெருமைகளின் கூட்டத்தினருகில் ஒரு பெரிய கரடியைக்கூட பார்த்திருக்கிறான். வளைந்துவளைந்து சென்று, மாஞ்சோலை நெருங்கையில் குளிர் துவங்கியது. தேயிலை மரங்களின் முடிவெட்டப்பட்ட பச்சைப்பட்டு, மொட்டைத் தோற்றம், கூட்டமாகப் பெண்களை படுக்கவைத்ததுபோல் மேடுபள்ளங்களுடன் அழகாக காட்சிதந்தது. பின் மாஞ்சோலை வந்தபின் பஸ்ஸை விட்டிறங்கி நடந்து, கெஸ்ட்ஹௌஸ் சென்று வெண்ணீரில் குளிக்கத் துவங்கும் வரை குளிர் கொன்றெடுத்தது. உணவுவகைகள் எல்லாமும் அங்கேயே தந்துவிடுவார்கள். கம்பெனிக் கேன்டீந்தான், அங்கு வேறு ஹோட்டல் எதுவும் கிடையாது.
சரியாக 9 க்குக் கிளம்பி க்ரூப் ஆபீஸுக்குச் சென்றான். அங்கு கம்பெனியின் " க்ரூப் மேனேஜர்" மீட்டிங்கில் இருந்ததால் அவன் சூப்பரின்டெண்டன்ட்டுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அங்கு ஒரு விசேஷம் என்னவெனில் நீங்கள் ஆபீஸில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு அரைமணிக்கும் உங்களுக்கு டீ தரப்படும். அது அவர்களின் வழக்கம். அந்த ருசி கொண்ட டீயினை உலகத்தில் எங்கும் உங்களால் சுவைத்திருக்க முடியாது. அவ்வளவு சுவை மிகுந்ததாக இருக்கும். ஜிஎம் பிசியாக இருந்ததால் கொஞ்சம் வெளியில் நிற்கலாமென அவன் சென்றான். வெளியில் கடும்குளிர். மேலும் 100 மீட்டரில் அடர்ந்த காடுவேறு. விதவிதமான பறவைகளின் சங்கீதமும் மான்களின் கத்தல்களும் அவனைக் காட்டின் பகுதிக்குச் செல்லத் தூண்டியது. அங்கு ஒரு அழகிய புல்பாதை காட்டினுள் சென்றது. கொஞ்சம் தூரத்தில் ஒரு நீரோடையின் சத்தம் ஜல்லென இரைச்சலுடன் கேட்டதால் அதை நோக்கிச் செல்லத் துவங்கினான். வழியில் ஒரு செந்நாயைக் கண்டான். பின் நீரோடைவரை சென்று திரும்பினான். ஆபீசில் செந்நாயை கண்டதைச் சொன்னான். எல்லொரும் அவனிடம் செந்நாய் பற்றிய பயங்கரத்தை சொல்லினர். அதாவது செந்நாயை மட்டும் காட்டில் கண்டுவிட்டால் பெரிய ஆபத்தாகிவிடுமாம். செந்நாய் எப்பொழுதும் தனியாக இருக்காதாம். 30-40 சேர்ந்தேதான் திரியுமாம். ஒருநாய் கடித்ததும் எல்லாம் சேர்ந்துகொண்டு சுற்றிவளைத்து எண்திசைகளிலும் கடிக்கத் துவங்கி, நம்மை உயிருடனேயே ( உயிர் உடலைவிட்டுப் பிரியுமுன் ) தின்றுமுடித்திடுமாம். தப்பவே முடியாதாம். கதையைக் கேட்டதும் ஒரு நிமிடம் குலை நடுங்கியது. தப்ப ஒரே வழி, ஏதாவது அருகிலுள்ள மரத்தில் ஏறி எட்டாமல் அமர்ந்துகொள்ளவேண்டுமாம். நண்பர் ஒருமுறை இப்படி ஏறியமர்ந்து ஒரு பகல், ஒரு இரவு முழுவதும் மரத்தின்மேலேயே கழித்திருக்கிறார். பின் ஊர்மக்கள் வந்துதான் காப்பாற்றியிருக்கின்றனர்.  
ஜிஎம் மதியவுணவுக்குச் சென்றுவிட்டு மாலை 4 க்கு வந்தார். அவன் இப்பொழுது அவரைக் காண அவர் அறைக்குள் நுழைந்தான். அவர் பெயர் கன்வில்கர், பூனாக்காரர். ஆஜானபாகுவான உடலமைப்பு கொண்டிருந்தார். அவன் கல்லூரிநாட்களில் அவன் தோழனொருவன் ஸ்ரீலங்காவானதால் அவனுடன் பேசிப்பேசியே ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் பேசும்திறன் பெற்றிருந்தான்.
சம்பாஷனை இதுதான்:
" குடீவ்னிங்க் மிஸ்டர் ஜிஎம்...
----- யெஸ்... குடீவ்னிங்க்... கம்மின் ப்லீஸ்... ( கை குழுக்கிகொண்டோம்)
ஹவ்வார்யூ... வெரி க்லேட் டூ மீட் யூ...
----- ஐயாம் ஃபைன். டேக் யுவர் சீட், ப்லீஸ்....... சாரி. ஜஸ்டமினிட்...
சில நிமிடங்கள் கழிந்தன.....
--------- ஒகே...  யா டெல்மீ. யூ ஃப்ரம் வேர்?
ஐயாம் ஃப்ரம் ..................
-------- ஓ ஐஸீ. ஹௌயிஸ்த பிஸ்னெஸ்?
குட் செர். ஜஸ்ட் அ ஸ்மால் நியூயியர் கிஃப்ட் செர்.... ( டைரியினை அவரிடம் கொடுக்கின்றான். )
----- ஓ தேக்ஸ். இட்ஸ் வெரி நைஸ் அண்ட் யூஸ்ஃபுல், குட்.....
------ அனிதிங்க் எல்ஸ்?
செர் வீ டூ இண்டஸ்டிரியல்ஸ் மெட்டீரியல்ஸ் சேல்ஸ் ஆல்ஸொ, அண்ட் கேன் கிவ் குட்  அண்ட் ப்ராப்ம்ட் சர்வீஸ் டூயூ செர்.....
------ இசிட்! ஒன்செக்கண்ட் ப்லீஸ்......
( அவர் உடனேயே ஃபேக்டரி மேனேஜரை இன்டெர்காமில் அழைத்து, என்னை அவரை சந்திக்க அனுப்புவதாக சொல்லி, ஏதும் ஆர்டரிருந்தால் கொடுத்து உதவுமாறும் சொன்னார். )
ஒகே மிஸ்டர் .................. யுகேன் கோ அன்மீட் மிஸ்டர் ரிச்சர்ட், ஃபேக்டரி மேனேஜர். ஹீவில் ஹெல்ப்யூ.
தேங்க்ஸ் செர். பைசீயூ....
வெல்கம்.... ( மறுபடியும் கைகுழுக்கல். )
வெளியில் வந்தபொழுது அவனை அவனாலேயே நம்ப முடியவில்லை. கொஞ்சம் பேசியபின், சூபரின்டண்டன்ட் அவனை அவர் வீட்டுக்கு வரும்படி சொல்லியழைத்துச் சென்றார். அவர் மலையாளி. திருவனந்தபுரம் அவரூர். அங்கு சிற்றுண்டியின் பொழுது அவரின் மகள்தான் பரிமாறினாள். மிகவும் அழகாக கேரள லட்சணத்துடன் பொருந்தி இருந்தாள். ஆனாலும் அவனை அவள் கண்டுகொள்ளவேயில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறாளாம். அவர் அவனிடம் நன்றாக நட்பாக பேசினார். அவர் அவனை கெஸ்ட் ஹௌஸ் சென்று எல்லாவேலைகளையும் முடித்துக்கொண்டு அவர் வீட்டின் பின்புறமுள்ள க்ளப்புக்கு வரும்படி சொன்னார். முடித்துக்கொண்டு வந்தபொழுது, க்ளப்பில் ஒரு இண்டோர் ஷட்டில் கோர்ட் இருந்தது. அங்கு அந்தப்பெண், மேலும் சிலருடன் ஆடிக்கொண்டிருந்தாள். இன்னும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. அது அவன் உணர்வுகளுக்கு கிடைக்கப்பெற்ற மறியாதயல்ல என்பதுமட்டும் அவனை உருத்தியது. இப்பொழுது சூப்பரின்டெண்டன்ட் அவனுக்கு ஷட்டில் விளையாடத் தெரியுமாவென கேட்டார். அவன் தெரியும் என்றான். அவனுக்கும் ஒரு பேட்டை எடுத்துக் கொடுத்து விளையாட சொன்னார். அதற்குரிய ஷூ இல்லாததால் கொஞ்சம் தயங்கினான். ஆனாலும் அவளை கவரவேண்டியதிருந்ததால் கோர்ட்டினுள் இறங்கினான். ஒரு சர்வ் ஒரு ஷாட்தான் எல்லோரின் கவனமும் அவன்மேல் திரும்பியது. அங்கு எல்லொரும் ஷட்டிலை விளையாடப் படித்துக்கொண்டிருப்பவர்கள். அவன் டிஸ்ட்றிக்ட் ப்ளேயர். அந்தப்பெண் அவனுக்கு எதிரணி. ஒரே சர்வ் தொடரில் 15-0 என வெற்றி பெற்றனர். நேராக வந்து அவள் அவனின் கையைகுழுக்கினாள். அவள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு சந்தொஷமாய் பேசத் துவங்கிவிட்டாள் இப்பொழுது.  அடுத்த ஆட்டத்தில் அவனுடன் வந்து நின்றுகொண்டாள். ஏதோ பலவருஷங்கள் பழகினவள் போல நடந்துகொள்ளத் துவங்கினள். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. விருவிருப்பான ஆட்டம் இப்பொழுது. அவன் வித்தைகளையனைத்தையும் காட்டிக்கொண்டிருந்தான்.
அதற்குள் ஃபேக்டரி மேனேஜர் வந்தார். தேவையானவைகளை எல்லாம் எழுதி ஒரு ஆர்டர் தயார் செய்து, சாமான்கள் அனைத்தும் மிகமிக அவசரம் என்றும் அதனால்தான் அந்த ஆர்டர் அவனுக்குக் கிடைத்தது என்பதையும் விளக்கிச் சொன்னார். கிளம்பும்பொழுதும் அந்தப்பெண் அவனிடம் வலியவந்து கைகுழுக்கினாள். இன்னும் ஒருவாரம் அங்கு இருப்பதாகவும் பின் திருவனந்தபுரம் செல்வதகவும் சொன்னாள்.
இப்படியாக ஒரு பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கப்பெற்று ஊர் திரும்பினான். அவனின் அப்பா அதை விரும்பாமல் அவனை ஒரு போட்டியாளனாகக் கருதத் துவங்கிவிட்டார் இப்பொழுது. அவன் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. பின் அவனே செயலில் இறங்கினான். சென்னை சென்று எல்லா சாமான்களனைத்தையும் வாங்கிவரத் தீர்மானித்துக் கிளம்பினான்.
2 நாட்களில் எல்லா சாமான்களையும் ஏற்பாடு செய்து, கையோடு எடுத்துக்கொண்டு மாஞ்சோலைக்குக் கிளம்பினான், ஒரு காரில்.  ஃபேக்டரி மேனேஜருக்கு எல்லாமும் கிடைக்கப்பெற்றதில் மிகுந்த சந்தோஷம். எல்லொரும் அவர்களுள் அவனையும் ஒருவனாக நினைத்து நட்பாகப் பழகத்துவங்கினர். அவன் ஒரேநாளில் அந்த இடத்தின் நாயகனாக தென்பட்டான். இதைக் கேள்விப்பட்டதும் க்ரூப் மேனேஜர் அவனை, அவரைச்சந்திக்க வரச் சொல்லி ஆளனுப்பினார். சந்திப்பின்பொழுது, அவனை வரவேற்று கைகுழுக்கி அத்தனை சாமான்களும் கிடைக்கப்பெற்றதால்  வாழ்த்தினார். அந்த சாமாங்களுக்காக ஏறத்தாழ 45 நாட்கள் காத்திருந்திருக்கின்றார்கள் என்பது அவனுக்குத் தெரியவந்தது. வெளியே சூப்பரின்டெண்டன்ட் அவனுக்காக காத்திருந்தார். 3 வருடங்களுக்கு எஸ்டேட்டுக்குத் தேவையான சாமான்கள் அனைத்தையும் அவனே சப்ளை செய்யும் காண்ட்றாக்ட் ஒரு ஆர்டர் ஒன்று எழுதப்பட்டு அவனிடம் கொடுக்கப்பட்டது. அனுப்பிய சாமான்களுக்கும் உரிய பில்களை உடனேயே பாஸ் செய்து செக் கொடுத்தனர். எல்லொரும் அவனை வாழ்த்தினார்கள். ஆனால் அவன், அவளை சந்திக்க முடியாத வருத்தத்திலேயே அன்று கிளம்பினான்.