கண் உறங்கும் நேரத்தில்
வரும் கனவு தான்
உன் காதல்...
என்றால்...
காலமெல்லாம்,,,
கண்ணுறங்க விரும்பிகிறேன்...
உன் காதலை சுமந்தவளாக...
என் கல்லறையில்...
உயிருக்கு உயிர் வாழ்த்தும்
உயிருள்ள வாழ்த்து இது
உயிருள்ள காலம்வரை
உன்னோடு உயிர்வாழ
உயிர்வைத்துக்காத்திருக்கும்
உன் உயிரானவள்...........
என் உணர்வுடன் கலந்தவனை
என் இதயத்து சந்தங்களை ரசிக்கவைத்தவனை
என்னை எனக்கு அடையாளமிட்டவனை
எனக்கும் மறுபிறவி உண்டென உணர்தியவனை
என்னை மீண்டும் மழலையாக்கியவனை
தொலைபேசியில் ரசிக்கும் - என்
தொலைதூர தோழனிடம்
சொல்லத்தான் நினைக்கிறன் ............
நான் நட்பில் மூடியிருப்பது
உன்மேல் கொண்ட நேசம்என்பதை - அனால்
முடியவில்லையடா.......
உன்னுடன் பேசுகையில் மட்டும்
என் வார்த்தைகள் விடுப்பெடுத்துக்கொள்கின்றன
ஆனாலும் .......
மனதோரமாய் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
ஐ லவ் யூ டா செல்லம் ................;