Friday 18 May 2012

புரிந்து கொள் நீயே....


நீ என்னை
விரும்புவதாய்
கூறிய பின்....


உன் மனக் கவிதையினை
அது வீசிடும்  நறுமணத்தை
உளமார உணர்ந்தபின்...


உன்னுயிர் உருகும் சத்தத்தை,
உடலுருக்கும் உதிரத்தை,
உள்மனத்தில் பூஜித்தப்பின்...



நான் முன்
வெறுப்பவைக்களையே
விரும்ப தொடங்கிவிட்டேன்
என்றால்.....

நான் முன்பே
விரும்பிய
உன் நிலை என்ன?
என்பதை....

உன்னிடமே
விட்டுவிடுகிறேன்.....
நீயே புரிந்துகொள்!!!