Monday 8 October 2012

கவிதையே போதும்


சிந்தித்தேன், இதழ் சிந்தித் தேன் எடுத்து,
சினம் சிந்தி எரித்துவிட்டாள்.

சிரித்தேன், வஞ்சி தேன் வந்துநிற்கும் என,
எண்ணிய என்னை நானே வஞ்சித்தேன்.

பார்த்தேன், தேன் எடுக்கவந்த வண்டை,
சிறகொடித்த சூறைக்காற்றாய் நீ!

மறந்தேன், மஞ்சம் எண்ணிய நெஞ்சம்,
உரித்துச் சேர்த்த உந்தன் கவிதைகளை.

கரைந்தேன், கவித்தேன் கலக்கும் இந்த
நிரந்தரம் போதும் என் மீண்டும் கலந்தேன்,

No comments:

Post a Comment