Friday 19 April 2013

உனக்காக செய்தி


தேடி தேடி
பூத்துப் போன கண்களும்
எண்ணி எண்ணி
தேய்ந்து போன சிந்தையும்
உனக்காக செய்தி அனுப்பி அனுப்பி
மரத்துப் போன விரல்களும்
என்ன செய்வது?
இன்னும்
எத்தனை காலம் இப்படியோ?.....


ஒரு முறை கூட
உன்னை நினைக்க மாட்டேன்
என்று சொல்லி சென்றாய் வீறாப்பாக....

ஆனால் இப்போதுதான்
நீ என்னை அதிகமாக
நினைக்கிறாய்
என்று
எனக்கு வரும்
கணக்கில் அடங்காத
விக்கலை வைத்து
தெரிந்து கொண்டேன்
உன்னை பற்றி.....


மனம் மயக்கும் சிறு தூறல்...
கொஞ்சம் குளிர் தரும்
மெல்லிய தென்றல்....

கண்ணுக்கும் சிந்தைக்கும்
இனிமையாய் மல்லிகை கொடி....

எண்ணத்தில் இனிமை கூட்ட
சுவரில்
இளம் நீல வண்ணம்.....

இத்துடன்
பால்கனியில் வட்ட வடிவ மேஜையில்
ஏலக்காய் போட்ட தேநீர் கோப்பையுடன்
வாசனை நிறைந்த
உன் அருகாமை...

மாலை நேரத்தில் சந்தோஷமா?
அல்லது
சந்தோஷத்துடன் மாலை நேரம் வந்ததா?



No comments:

Post a Comment