Wednesday 24 April 2013

உன் நினைவோடு


சிறகுகள் இருந்தும் பறக்கவில்லை
உறவுகள் இருந்தும் பகிர்ந்ததில்லை
வார்த்தைகள் இருந்தும் பேசவில்லை
உன் அன்பும் துணையும் கிடைக்கும் வரை

இதுதான் வாழ்க்கை என்றிருந்தேன்
இதுமட்டும் வாழ்க்கையில்லை என்றுரைத்தாய்
எதையும் சிந்திக்கும் தெளிவை தந்தாய்

நீ யாரென்று சிந்தித்தேன்

என்னை காக்கும் தாயா ?
போதிக்கும் புத்தனா ?
நேசிக்கும் கணவனா ?
நான் யாசிக்கும் காதலனா?
அன்பை பகிரும் சினேகிதனா ?
நான் கொஞ்சும் குழந்தையா?
வழிகாட்டும் தந்தையா?

இவையாவும் நீயென உணர்ந்தேன்

உன் மூச்சுக்காற்றை மட்டும்
என்னில் தரவில்லை
உன்னுள் இருக்கும் உன்னை
என்னில் தந்தாய்
நீயாக நானிருப்பேன்
நம் மூச்சோடு வாழும்வரை
உன் நினைவோடு கை கோர்த்து நடக்கையில்
அலைகளும் என் மனதை போல்
மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது .

உன் காலடி தடத்தை தேடி களைத்த
என் மனம்
உன் நினைவின் தேடலில் சிலிர்த்தது.

கரையை தீண்டிகொண்டே இருக்கும்
அலைகள் போல்
என் மனமும் உன் நினைவை
ஒவ்வொரு நொடியும் தீண்டிச்செல்லும் !


அலைகள் கரையில் கவிதை பேசிக்
கொஞ்சிச்சிரித்தபின் ஆழ்கடலினுள்
அமைதியாய் உறங்கிவிடுகிறது.

உன் அன்பின் அலைகள் உதிரத்தினுள்
உராய்ந்து களித்தபின்,ஆழ்மனக்
கடலினுள் விழித்துக்கிடக்கின்றது.

No comments:

Post a Comment