அது ஒரு
மோபெட்தான். ஓட்டுனரின் இருக்கையினைத் தவிர மற்ற எல்லாப் பகுதியிலும் ஏதாவதொரு
பெட்டி அடுக்கப்பட்டிருக்கும். மொத்தம் பெரிய பெட்டிகள் 4, பக்கவாட்டில், சிறிய
பெட்டிகள் 8, உயரவாக்கில் அடுக்கிக் கட்டப்பட்டிருந்தன. சிறுசிறு தொழில்
செய்திடும் ஆண் மற்றும் பெண்கள் புதிதாகத் தயாரித்து, விற்பனை செய்திட முடியாமல்
தினரும் பொருட்களை கடைகடையாய் கொண்டு சென்று விற்பனை செய்திடும் ஒரு வியாபாரி
அவன். காலையில் எடுத்துவரும் சாமான்களுக்கு மாலையில் பணம் தந்திடுவான். அவனுக்குரிய
லாபம் 30% மட்டுமே. கூடவும் விற்பதில்லை குறைவாகவும் கொடுப்பதில்லை. எல்லோரிடமும்
நல்ல பெயர் பெற்றிருந்தான். நெல்லிக்காயின் ஊருகாய், மிட்டாய், ஜூஸ், இப்படி
எல்லாவகைப் பொருட்களும் இடம்பெரும்.
ஒரே ஜீன்ஸ்
பேன்ட்தான் உண்டு. பார்க்கையில் சுத்தமாக ஒரு கிராமத்துவாடை வீசினிற்கும் அவனிடம்.
பெரும் உழைப்பாளி. ஆனால் அவன் கிராமத்தானாக இருப்பினும் பியெஸ்ஸி, எம்பிஏ படித்தவன்.
வெளிநாடு செல்லும் எண்ணமும், ஆங்கில ஆசிரியரின் வற்புறுத்தலும் இருந்ததால் ஸ்போகன்
லேங்க்வேஜ் நன்கு கற்றுத் தெரிந்துவைத்திருந்தான். ஆனால் படித்ததும் வேலை
கிடைக்கவில்லை. 3 மாதங்கள் சுற்றியலைந்தான். ஒரு உயர்தர பள்ளியில் வாத்தியார் வேலை
கிடைத்தது. மாதச்சம்பளம் 2500 என்றார்கள். உதறிவிட்டு, அப்பாவின் மோபெட்டை
வாங்கிக்கொண்டு தொழிலைத் துவங்கியவந்தான். இப்பொழுது 6 வருடங்கள் ஓடிவிட்டன.
தினமும் வருமானம், செலவுபோக 2000 ரூபாய் நிற்கின்றது. அதற்குமேல் அவன்
ஆசைப்படவுமில்லை.
ஒரு நாள் ஒரு
முக்கியமான சூப்பர்மார்கெட்டுக்கு விற்பனைக்கு செல்லும்வேளையில் ஒரு மெர்சிடிஸ்
பென்ஃஸ் காரொன்று நிற்பதைக்கண்டான். நிச்சயமாக ஒரு பெரிய நிறுவன முதலாளியின்
காராகத்தான் அது இருக்கவேண்டும். உள்ளே சென்று தன் தொழிலை செய்துகொண்டிருந்தான்.
அந்தக் கேபினில் எல்லொரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான். மேலும்
எல்லொரும் அவனைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொள்வதையும் உணர்ந்தான். ஒரு சிப்பந்தி
அவன்னொக்கி ஓடிவந்து, முதலாளி தன்னை கொஞ்ச நேரம் இருக்குமாறு சொன்னாரென்று சொல்லிச்சென்றான்.
அவன் காத்திருந்தான். ஒருமணி நேரம் ஓடிவிட்டது. என்னவாக இருக்கும் என்று மனம்
பதபதைத்தது.
நிறுவன
முதலாளியும், சூப்பர்மார்கெட் முதலாளியும் வெளியில் வந்தார்கள். அவனை
மற்றவருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்கள். அவனிடம் தங்களோடு மதிய உணவுக்கு வரும்படி
வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள். மோபெட்டை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றான். அது ஒரு
ஸ்டார் ஹோட்டல். பஃப்ஃபேமுறை உணவு. முதல்முறை என்பதால் என்ன செய்வதென புரியாமல்
பிடித்த, சுவையான உணவுகளனைத்தையும் ஒரு கை பார்த்துவிட்டான். நிச்சயமாக இரவு உணவு
தேவையிருக்காது, எனத்தோன்றியது. உணவுமுடிந்து மூவர்மட்டும் அமர்ந்து பேச்சைத்
துவக்கினர். பெரிய நிருவன முதலாளிதான் பேச்சைத் துவக்கினார். என்ன
படித்திருக்கின்றாய் எனக்கேட்டதற்கு, சொன்னான். பின்னர், “ உன்னுழைப்பைப் பற்றி
கேள்விப்பட்டேன். நன்கும் படித்திருக்கின்றாய். இந்த ஊரில் ஒரு ஹோல்சேல் யூனிட்
துவங்கலாம் என்று முடிவுசெய்திருந்தோம். உனக்கு விருப்பமிருந்தால் நாம் பங்குதாரர்களாய்
அந்தத் தொழிலைத் துவக்கலாம் என்றிருக்கிறேன். மொத்த பணமும் நானே போட்டுவிடுகிறேன்.
மொத்தபொறுப்பையும் உங்கையில்கொண்டு நல்லமுறையில் தொழிலினை நடத்திடவேண்டும். உனக்கு
50% பங்கு, எனக்கு 50% பங்கு. தீரயோசித்து முடிவெடுத்து சொல்.” என்று சொன்னார்.
அவனும் அதைக்கேட்ட
மாத்திரத்தில் உடனேயே சரியென்று சொல்லிவிட்டான்.
இப்பொழுது மேலும்
பத்துவருடங்கள் கழிந்து, அது அந்தப் பெரிய க்ரூப் கம்பெனியின் போர்ட்மீட்டிங்க்கின்
சமயம். மொத்தம் 6 தொழிர்ச்சாலைகள் அதில் அடக்கம். அவன் நிர்வாக இயக்குனர்,
அந்தப்பெரியவர் சேர்மன்.
No comments:
Post a Comment