Saturday 23 February 2013

இனியாவது இணைந்து நிற்போம்


ஒவ்வொரு நொடியும்
உன் அலைபேசி
அழைப்புக்காக காத்திருக்கின்றேன்...
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத்
தந்ததால் தானோ
உயிர் போகத் துடித்தேன்...
அன்பினை கொட்டிக் கொட்டி கொடுத்தாய்...
இனி கொட்டி கொடுக்க அன்பில்லை என்றா
என்னை விட்டு விலகிச் சென்றாய்...
என் பதிலுக்காக
நீ காத்திருக்கவில்லை...
உன் இனிமையான
வாழ்க்கையைக் காண
ஆவலுடன் காத்திருக்கிறேன்
உன் நலம்விரும்பியாய் நான்...
இதுதான் அன்பு
என்று உணர வைத்தாய்...
நான் உணர்ந்து நின்ற வேளையிலே
நீ வெகு தொலைவில் சென்றாய்...
மீண்டும் உன் வரவினை
எதிர் பார்த்துக்
காத்திருப்பவனாய் நான்...
எதிர்பார்ப்பைத் தந்தவன் நீயே...
எதிர்பாக்க வைத்தவனும் நீயே....
எதிர்பார்த்து நின்ற வேளையிலே...
எதிர்பாராமல் என்னை விட்டுச் சென்றவனும் நீயே...
உயிர் போக வலியைத் தந்தாய்...
இரணமாக இதயம் மாறக் கண்டேன்...
என் கவிதையின் வரிகளுக்கு...
உயிர் கொடுக்கிறது
சில நேரங்களில்
உன்னைப் பற்றிய நினைவுகள்!!!...
விக்கல் வரும் போதெல்லாம்
விம்மி விம்மி அழுகிறேன்...
என்றாவது ஒரு நாளாவது
நீ என்னை நினைக்கிறாயே
என்ற ஆனந்தத்தில் தான்...
எனக்காக நீ காத்திருந்த நொடிகளெல்லாம்
அலச்சியமாகவே தெரிந்தன எனக்கு...
ஆனால் இன்றோ?!!...
உன் இதழ் விரிக்கும்
ஒரு துளி புன்னகைக்காக
மாதங்கள் பல காத்திருக்கின்றேன்...
பொக்கிசமாய் அதனை
மனதிற்குள் பூட்டி வைக்க...
நாம் இயல்பாய் தான் பேசிக்கொள்கிறோம்...
ஆனால் கடந்த காலத்தைப் போல்
நன்றாக பேசிக்கொள்ளும் நிலை...
இல்லை போலும்...
நீ ஒன்று நினைக்க
நான் வேறொன்றை நினைக்க...
தானாக ஏதோ ஒரு வழியில் செல்கிறது...
நம் வாழ்க்கைப் பாதை...
இனியாவது இணைந்து செல்வோம்,
தண்டவாளங்கள் போல் அல்லாமல்.

No comments:

Post a Comment