Tuesday 26 February 2013

உன் சிரிப்பில் என் வெட்கம்


தென்றலாய் வீசுகிறது...
மழையாய் பொழிகிறது...
மல்லிகையாய் மணக்கிறது....
முக்கனியில் மாவாய் இனிக்கிறது....

குறைகளின்றி களங்கமின்றி
அது போன்றவைகளின்
சாயல் கூட சற்றுமின்றி
மாயமாய் நிழல் கூட எட்டி நிற்க,

தும்பைப் பூ தூய்மையிலே
உன் விழி மிதக்கும் நின் நட்பு நோக்க,
புலிகண்ட சிறுமுயலாய் மனசஞ்சும்
உன்னிடம் காதல் சொல்ல!

என்ன தவம் செய்தேன். ..
என்னையே எடுத்தணைக்க...
என்னுயிரிலேயே உன்னைக்கலக்க...
எண்ணியன எனை எள்ளி நகைக்க.

No comments:

Post a Comment