Thursday 21 February 2013
உயிரே போனாலும் இறவாத காதல்.
உன் கயல் விழிகள் பார்த்து...
செக்க சிவந்த
பட்டு ரோஜாவின் இதழ்கள் பார்த்து....
பஞ்சிலும் மென்மையான
விரல்கள் பார்த்து.....
எதற்கும் அடங்காமல்
உன் அலைபாயும் கூந்தல் கண்டு,
விழுந்து விட்டேன் காதல் வயப்பட்டு.....
நான் மீண்டு எழுவதற்கு
பிடிமானம் எது?....
சென்றுகொண்டே இருக்கிறாய்.
தேடித் தேடி
களைத்துக் கிடக்கிறது உன் பார்வை.
அழுது அழுது
சலிப்பில் ஊறியபடி உன் விழிகள்.
கல்லையும் முள்ளையும்
கவிழ்க்கும் பள்ளங்களையும்
மட்டுமே சந்தித்து சிந்தித்து
நொந்து நொறுங்கி உன் பாதங்கள்.
முன்னே மறிக்கும் சுவர்களில் மோதி
உயிர் உடைகிறாய்...
நினைத்துநினைத்து நினைவு சுருங்கி
மனம் தவிக்கிறாய்.....
மரூவிமரூவி தூக்கம் மறந்து
துக்கம் கொள்கிறாய்.....
கொஞ்சம் திரும்பிப்பார்
நான் உன்னருகில்தான் இருக்கிறேன்.
மடியில் சாய்ந்துகொண்டுதான் விசும்புகிறாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment