Thursday 28 February 2013

புலியவள் பெண்

கரைபுரண்டு ஓடிடும் கங்கையவள். 
கங்கை கொண்ட வேங்கையுமவள். 
சங்கை தெரித்தோடும் குரல் மங்கையவள், 
சதங்கை சதிராடும் நடமாடிடும், 
பாங்கை, மங்கை கொண்டு குழைத்தவள் 
தங்கை நிலையறிந்த தங்கையவள். 
புங்கையின் நிழல் துயிழ்ந்து புன்னகை 
தவழ புங்கையை மறந்து நிற்பவள். 
முருங்கை, பங்கை வருத்தி வறுத்து, 
பருங்கை பதிய வெருங்கை கொண்டு, 
பங்கை போர் தொடுத்து பதம்பார்த்து, 
தேவைக்கு நீட்டிடும் பாசக்கையவள். 
தங்கையால் பிடித்த அக்காளை ஏறுவாள்.

No comments:

Post a Comment