Friday 1 March 2013

வானம் தொட்டுவிடும் தூரம்


இது உள்ளே தவழ்கிறோமா,
வெளியே பறக்கிறோமா,
இது எதனால் ஆனது.

ஏதாவதொன்று உண்டெனில்
அது எத்தனினுள்ளாவது
இருந்திட வேண்டும்தானே!

கருப்பினைக் கொண்டது
உண்மை வெண்மையினை
உலகுக்கு விதைத்தது.

இந்த இருப்பின் உயரம்தான் என்ன
ஏறியபின் வருவதென்ன
அப்படியாயின் இது எதனுள் இருக்கிறது.

தீயினைப் படைத்தாய்,
நிறம் பார்க்க முடிகிறது,
எதநினை வைத்து உருவாக்கினாய்.

அணுக்களையும் அதனினுள்
காந்தத் துகளையும் கொடுத்தாய்,
அவை எதனால் செய்யப்பட்டது.

நாக்கில் பட்டதும் அறுசுவை
பட்டுத் தெறிக்கும் மூளையினுள்,
சுவைகள் எதனால் நெய்யப்பட்டன.

காற்றினில் வரும் கீதம்,
காதினில் வருடும் தேன்
இசையின் உட்பொருள்தான் என்ன.

காண்பதெல்லாம் அழகு,
பட்ட ஒளியெல்லாம் இனிமைதான்
வர்ணமாலை புனையப்பட்டது எதனால்.

புரியாத புதிராய் எல்லாமும்
கண்முன்னே களம் அமைப்பினும்
கல்லான பொருள்தான் இந்தக் கடவுள்

No comments:

Post a Comment