உயிரின் இறுதி அணு வரை
ஓய்வெடுக்கத் துடிக்கும்
இரவின் ஆளுமையில்....
தேவையில்லா சுமைகளைச்
சுமந்துநிற்கும்
உடலும் உள்ளமும் ஓய்வு ஓய்வு
என்று புலம்பும் நிலை.....
இரவின் பிடியில் சிக்கித் தவிக்கும்
படபடக்கும் தீயெனக் கண்கள்....
அங்கே நீநீ என்று திரும்பத்திரும்ப
உரைத்திடும் மனம்....
ஆனால் நினைவு தெரிந்த நாள் முதல்
நடந்த அனைத்து சம்பவமும்
கண் முன்னால் அனகோண்டா
ஆட்டம் போடுவது போல
ஆட்டம் போட....
மேல் இமை கீழ் இமைக்கு
சொந்தமில்லை..........
தூங்கினால் கனவு வரும்
தூக்கத்திற்கு வழி இல்லை.......
பகற்கனவிலோ உன்னின்
ஆக்கிரமிப்பு, ஆணவத் தொல்லை....
எந்த பாவமும் அறியவில்லை....
ஆனால் தூக்கமில்லாத நிலை ஏன்?
தொண்டையில் சிக்கின முள்ளாய்.....
தூக்கமும் வரம்தான்...
அதற்கும் தவம் செய்திருக்க வேண்டுமோ?....
மடிசேரத்துடித்து மடிந்துநான்....
No comments:
Post a Comment