Sunday 31 March 2013
நீ.. நீ.. நீயேதான்?
எனக்குள்ளும் நீ...
என் இதயத்தினுள்ளும் நீ...
நாளின் உதயத்திலும் நீ....
எண்ணங்களிலும் நீ...
எழுதிய வண்ணங்களிலும் நீ....
சிலிர்க்கும் சிந்தையிலும் நீ....
சின்னச்சின்ன கவிதையிலும் நீ...
சிந்திய கண்ணீரிலும் நீ...
தடவிய மருந்திலும் நீ...
அதிரும் உதிரத்திலும் நீ....
உலவிடும் உயிர்த்துடிப்பிலும் நீ....
சிங்காரச் சிரிப்பிலும் நீ...
கக்கிய கோபத்திலும் நீ....
மன ஆழத்திலும் நீ...
ஆழ்மனத்திலும் நீ.....
மயங்கின விழியிலும் நீ...
விழித்திரை முழுவதிலும் நீ...
காணும் காட்சியிலும் நீ...
காட்சிக் கலைப்பிலும் நீ....
கனிவான கனவிலும் நீ...
கனவுக்குள் காதலனாயும் நீ....
முழுமைக்கும் நீ.. நீ.. நீயேதான்?
பின்னெப்படி மறைத்து
பாவனை காட்டிட!
என் முகத்தின் சுருக்கத்தினை
அரிந்து, அறிந்தவன் நீ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment