Sunday 3 March 2013

நிரந்தரப் புன்னகை


சாளரத்தின் வழி இறங்கிய
வலுத்த காற்றில்
வழிந்த தென்றல்,
நிரப்பின அறையினைப்போல்,

எனக்குள் பரவின
உன் ஆன்மக் காதல்
உன் உயிரினையும்
சேர்த்து ஓட்டிச் சென்றது.

மணவாழ்வில், துணைகள்
இணைபிரியா தண்டவாளங்கள்தான்.
அவைகளின் முடிவிலும்
சேர்ந்திட வழியில்லை.

காதலின் ஆன்மநிலையில்
அவை பிணைந்து இணைபிரியா
மின்கம்பியின் இணைப்புதான்.
அவை முடிவில் ஒளிருபவை.

காதலுடன் பெரும் மணம்,
பூத்துக் குலுங்கும் சோலை.
புன்னகையின் நிரந்தரம்.
இறைவனின் சந்நிதானம்.

No comments:

Post a Comment