Friday 29 March 2013

வாசனை நிறைந்த உன்...


மனம் மயக்கும் சிறு தூறல்...
கொஞ்சம் குளிர் தரும்
மெல்லிய தென்றல்....

கண்ணுக்கும் சிந்தைக்கும்
இனிமையாய் மல்லிகை கொடி....

எண்ணத்தில் இனிமை கூட்ட
சுவரில்
இளம் நீல வண்ணம்.....

இத்துடன்
பால்கனியில் வட்ட வடிவ மேஜையில்
ஏலக்காய் போட்ட தேநீர் கோப்பையுடன்
வாசனை நிறைந்த
உன் அருகாமை...

உன்வாசம் பருகினபடி
உயிரினுள் கலக்கமுயலும்
என்னினிய வாசம்,
உந்தன் மடியினில் குழந்தையாய்...

எண்ணங்களிலொரு தேன்மழை,
இதயத்திலொரு பூமழை,
மூளைக்குள்ளொரு கிறக்கம்,
முந்தானையினுள் ஒரு காதல்,
இதுஎன்ன....

மாலை நேரத்தின் சந்தோஷமா?
அல்லது
சந்தோஷத்துடன் மாலை நேரம் வந்ததா?

No comments:

Post a Comment