Monday 25 March 2013

அருகினில் வந்தால் இல்லைஎன்கிறாய்


உச்சந்தலையில் ஓர் துளி,
உதட்டோரம் மறு துளி,
இனிமையான மழைத்தூரல்தான்,
நனைந்திடத் துடிக்குது மனம்.

ஊர் கடைசியில் ஒலிபெருக்கி,
உன் தலைமுடி உதிர்வைதைப் பாடிடும் ,
ஒலிமழையின் அலைகள்தான்,
மூழ்கிடத் துடிக்கும் மனம்.

வேரில் தேனைத் தேக்கி,
மரத்தலையில் குடியிருக்கும்,
மணம் மயக்கும் மலர்க்கூட்டம்தான்,
மஞ்சத்தினில் துயிலத்துடிக்கும் மனம்.

உன் கடைக்கண் வீச்சினில் சிக்கி,
அது தந்த மொழியினில் கிறங்கி,
இடையின் நடையில் மயங்கித்தான்,
தயங்கித்தான், கரம்பிடிக்கத் துடிக்கிறது.

உயிர்கொண்டு தழுவிடக் கேட்டால்
ச்சும்மா விளையாட்டுக்கு என்கிறாய்.
காதலொரு இருட்டுத்தான் உனக்கு!
கண்கேட்டபின்பே சூரிய உதயம்.

No comments:

Post a Comment