Sunday 17 March 2013

தவறிய பாதையும், வழிகாட்டியும்


அது இலங்கையின் ஒரு மலைப்பகுதி. அவன் அந்தப்பகுதியின் தேயிலைத் தோட்டங்களுக்கு தேவையான தொழில் குத்தகைகளை எடுத்து, மிகவும் தெளிவாக அவைகளை செய்து முடித்துக்கொடுத்து அந்த முதலாளிகளிடம் நல்லபெயர் எடுத்து வைத்திருந்தான். நல்லவன். தமிழன். என்ன வேலையெனினும் அவனையே அழைப்பார்கள். அவனின்கீழ் நூரு நன்கு உழைக்கும் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். அவன் அழைத்த குரலுக்கு செவி சாய்ப்பார்கள். அவனும் அவர்கள் அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து, கவனித்துக் கொண்டான். வீடு பங்களா என்று ராஜவாழ்வு வாழ்ந்திருந்தான். அவனுக்கு ஒரேயொரு பெண்குழந்தை இருந்தாள்.
ஈழப்போர் தீவிரமடைந்த பொழுது அது. தன் சொந்தங்கள் வடக்கில் வாழ்ந்ததால் அவர்களைக் காண ஒருமுறை வடக்கு சென்றிருந்தான். அங்கு போரின் தீவிரத்தில் சிக்கி என்ன செய்வது என்று தெரியாமல் மொத்தமாய் குழம்பி ஊர்திரும்பினான். அந்த காட்டுப்பகுதியில் மற்றெப்பொழுதும் இல்லாத வகையில் இப்பொழுது மரியாதை இல்லாமல் போனது, அதற்கு புலிகளின் தற்கொலைப் படைகள் ஏற்படுத்தியிருந்த கொலைபயம். கொஞ்சம்கொஞ்சமாக அந்தப்பகுதியின் மக்கள், தமிழர்களை நம்புவது குறையத் துவங்கியது. புலிகளும் தங்களின் போட்டிக் குழுவினர்களையும் நல்ல தமிழ் தலைவர்களையும் கொன்றுகுவித்தனர்.
அவனுக்கு இப்பொழுது யாரையும் நம்பமுடியாதனிலை, மனத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. எங்கு தவறு இருக்கிறது என்பதினை பிரித்துணர முடியாமல் ஆகிவிட்டது. புலிகளின் போர் நன்மை தரக்கூடியதா? இல்லையா? இவற்றின் முடிவுதான் என்ன? பயமாக இருந்தது. ஒன்றுமட்டும் தீர்மானமாகப் புரிந்திருந்தது, அவர்களுக்கு. இந்தப்போர் ஒருபயனையும் தமிழர்களுக்குத் தந்துவிடப்போவதில்லை என்பதே அது. நெருக்கடி முற்றியதும் சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு, தன்னோடு உதவியாக வரத் தயாராக இருந்த சில மக்களோடு ஒரு நாட்டுப்படகில் கிளம்பி ராமேஸ்வரம் வந்தடைந்தனர். இங்கு அவர்களுக்கு நல்ல மறியாதை இருக்கும் என்று நம்பித்தான் இங்கு தமிழகம் வந்தனர்.
அவனின் வாழ்க்கையில் இந்த அளவுக்கு மோசமாக சிங்களர்கள் கூட அவனை கேவலமாக நடத்தினதில்லை. ஆனால் தமிழகத்தில் நடந்தவைகள் அனைத்தும் மறக்கப்படவேண்டியவை. அவனுக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்தது ஒரு சிறு குடிசை. கிடைத்த உணவு, இலங்கையில் இருந்தபொழுது அவனின் நாய்களுக்கு அவன் போடும் உணவுதான் அது. செய்திடக்கூடாத பெரிய தவறு தம் மக்கட்கு செய்துவிட்டதாய் நினைத்துனினைத்து வருந்தினான். மேலும் அவர்கள் வெளியிலும் செல்லமுடியாது. முழுனாளும் அந்தக் குடிசையினுள்தான். அந்து சிறிய வட்டத்தினுள்தான் இருந்துகொண்டு, எல்லாமும்.
அந்த ஊரின் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், கண்ணில் கண்ட அனைவரிடமும் பேசிப்பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வருடம் இப்படியாக உருண்டு ஓடியது. பின் யாரும் அவர்களைக் கண்டுகொள்ளாத நிலை வந்தபின், அவன் யோசித்தான். சக நண்பர்களுடன் கலந்தாலோசித்தான். முடிவு செய்தார்கள், கூரை வேயும் குத்தகைகளை எடுத்து செய்யலாம் என்று. பெரிய ஊர்களுக்கெல்லாம் அலைந்து திரிந்து வேலை செய்தார்கள். வேலை தெளிவாகவும், சுத்தமாகவும், விரைவாகவும், குறைந்த செலவாகவும் இருந்ததால் தமிழக மக்களிடம் “இலங்கை அகதிகள், கூரைகள்” (இங்கும் அகதிகள்தான்) என்ற நல்ல பெயரினைப் பெற்றது. நல்ல வருமானமும் பெற்றுத் தந்தது. நல்ல பணமும் கிடைத்தது. எல்லொருக்கும் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த திருப்தி கிடைத்தது. இப்பொழுது அவர்களின் வாழ்க்கைக்கு எந்தவகையிலும் பயமில்லை. தங்களின் குழந்தைகளையும் சிறந்த பள்ளிகளில் படிக்கவைக்க முடிந்தது.
இலங்கையில் நடக்கும் அன்றாட போர் நடவடிக்கைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் வாழ்ந்தார்கள். ஒவ்வொரு தமிழ் தலைவர்களும் கொல்லப்பட்டது, சிங்கள தலைவர்கள் சிதைக்கப்பட்டது. புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்டது, பாரதப் பிரதமர் கொல்லப்பட்டது, அதனால் தங்களுக்கு இந்திய அரசினால் ஏற்பட்ட நம்பிக்கையற்ற நிகழ்வுகள், எல்லாமும் கடந்தாயிற்று. வருடங்கள் 20 ஓடியாகிவிட்டன. புலிகள் தலைவர் கொல்லப்பட்டார். சிங்களவெறிகளும் அடங்கிவிட்டது. இப்பொழுதும் ஞாயம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். தனியீழம் பற்றியும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் கஷ்ட சூழ்னிலையில் வதங்கிக்கொண்டு அகதியாய், கைதிகளாய் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எம்மக்களை என்ன செய்யப்போகிறார்கள்.
அடைந்த வெற்றியென்னவெனில் கேள்விக்குறி மட்டுமேதான் இன்றும்.....

No comments:

Post a Comment