Monday 4 March 2013

மணம் பரப்பிய மலர்


நண்பர்கள் அவையில்
தலை குனியாத கம்பீரத்துத்துடன்
சுற்றி திரிந்த மாவீரன் நான்,

சொல்ல நினைக்கும் கருத்தை
நினைத்த நொடியில்
பட்டாசு போல வெடித்து சொல்லும்
நான்,

எந்த போட்டியிலும் ஜெயித்து
வந்த நான்,

உன் மீன் விழியின்
கடை கோடி பார்வையில்
சிக்கி சின்னாபின்னமாகி
சொல்ல நினைத்ததை
சொல்ல முடியாமல்
தோற்று போய் நிற்கிறேன்..

உன் மீதான
என் காதலை கூட
உன் கண்களுக்குள்
வீசியெறிய தயங்குகிறேன் ....
ஆயினும்....

தேன் சுரக்கும் உதற்றினுள் சிக்கி
தேனூற்றினுள் கரைந்திட ஆசை.

மீன் குளிக்கும் நீரினுள் நீந்தி,
உயிர்கொண்டு பூசிவிட ஆசை.

உன் உயிர்த்துளி சக, ஈர்தச மூன்றில்
ஒர்தசம் என்னை விதைத்திட ஆசை.

இங்கு உடலுண்டு, உயிருண்டு,
மணம்பரப்பும் மலருண்டு,
உணர்வுண்டு, உரிமையோடு
உள்ளம் கொள்ளும் காதலுண்டு,

கண்ணே காணக் கனவுமுண்டு,
கனவுக்குள் கலவுமுண்டு,
களவு செய்த நிலவுமுண்டு,
கண்ஜாடைக் கதையுமுண்டு,

காண், கவிபாடி மனம் கலைத்த
மல்லிகையைத்தான் காணவில்லை.

No comments:

Post a Comment