எனக்காகவே சிரிக்கின்றாய்...
எனக்காகவே அழுகின்றாய்...
எனக்காகவே நிழல் போல நடை போடுகின்றாய்...
எனக்காகவே உன் வாழ்க்கைப் பயணத்தை
தொடர நினைக்கின்றாய்...
அனைத்தும் தெரிந்திருந்தும்
உன்னை விட்டு விலகியே நிற்கின்றேன் நான்...
நம் நலன் கருதி...
இல்லை இல்லை...
உன் நலனை மட்டுமே மனதினிற்கொண்டு...
விலகியே நிற்கின்றேன் நான்...
நீ பேசாத நாட்களெல்லாம்
மனதினைக் கொன்று
சித்திரவதை செய்கிறது
என பொய் சொல்லத் தோன்றவில்லை...
ஆனால்...
ஏதோ ஒரு இனம் புரியா மாற்றத்தை
ஏற்படுத்த தவறவில்லை...
இதுதான் மௌனத்தின் வலிமையோ!!!...
விடியும் பொழுது கூட
உன் பெயரை சொல்லித்தான்
விடிகிறது...
இன்றாவது நீ என்னிடம்
பேசி விட மாட்டயா?!...
என்ற ஏக்கத்துடன்!!!...
அலைகள் ஓய்வதில்லை...
ஆம்... நம் மன அலைகள் ஓய்வதில்லை...
என்னைப் பற்றிய நினைவுகள்
உன் மனதிற்குள்ளும்...
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும்...
காரணமே தெரியாமல்
அலை பாய்ந்து கொண்டிருக்கின்றன.....
என் அலை பேசிக்கும்
ஏதோ ஒரு ஏக்கம்...
அழைப்புகளில் எதாவது ஒன்று...
உன் பெயரினைக்
காட்டி விடாதா என்று?!!!...
கண்கள் எட்டும் தொலைவில்
நீ இருந்தும்...
உன்னைப் பார்க்க மறுக்கும்
கண்களுக்கு...
எப்படிப் புரியும்?!!!...
என்றாவது ஒரு நாள் தான்
உன் தரிசனம் கிடைக்குமென்று?!!...
நாம் இயல்பாய் தான் பேசிக்கொள்கிறோம்...
ஆனால் கடந்த காலத்தைப் போல்
நன்றாக பேசிக்கொள்ளும் நிலை...
இல்லை போலும்...
நீ ஒன்று நினைக்க
நான் வேறொன்றை நினைக்க...
தானாக ஏதோ ஒரு வழியில் செல்கிறது...
நம் வாழ்க்கைப் பாதை...
என் பிறந்த நாளுக்கு
நீ பொக்கை கொடுத்து வாழ்த்த வேண்டாம்...
உன் பொக்கை வாயினைக் கொண்டு...
பல புன்னகைப் பூக்களை
உதிர்த்தால் போதுமானது...
என் அறுபது வயது கிழவியே!!!...
எனக்காக நீ காத்திருந்த நொடிகளெல்லாம்
அலச்சியமாகவே தெரிந்தன எனக்கு...
ஆனால் இன்றோ?!!...
உன் இதழ் விரிக்கும்
ஒரு துளி புன்னகைக்காக
மாதங்கள் பல காத்திருக்கின்றேன்...
பொக்கிசமாய் அதனை
மனதிற்குள் பூட்டி வைக்க...
விக்கல் வரும் போதெல்லாம்
விம்மி விம்மி அழுகிறேன்...
என்றாவது ஒரு நாளாவது
நீ என்னை நினைக்கிறாயே
என்ற ஆனந்தத்தில் தான்...
என் கவிதையின் வரிகளுக்கு...
உயிர் கொடுக்கிறது
சில நேரங்களில்
உன்னைப் பற்றிய நினைவுகள்!!!...
No comments:
Post a Comment