Sunday 27 January 2013

மறு ஜென்மம்


அவள் விரும்பி விபச்சாரத்திற்குச் செல்லவில்லை. சொல்லப்போனால் அவள் ஒருவனை மனதாரக் காதலிக்கவும் செய்கிறாள். குடும்ப சூழ்நிலை, அதற்குள் தள்ளப்பட்டுவிட்டாள். அவளால் ஒன்றும் செய்துவிட முடியவில்லை. என்னசெய்வது, இந்தியாவில் ரூ. 2 1/2 லட்சம் வருமானவரி வரம்பு. (அவளின் குடும்ப வருமானம், மாதம் 2000 ரூ தான் இருந்தது.) அப்படியானால் ஒவ்வொரு குடும்பமும் அந்தவருமானம் பெற அரசு உதவி, உயர்த்திட வழிவகை செய்திடல் வேண்டுமல்லவா? அதற்காகத்தானே அவர்களுக்குப் பதவிகள் தரப்பட்டிருக்கின்றன. ம்ம்ம்ம்... இருந்தும் இந்திய அரசுக்கும் அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் மொத்தமாக கொள்ளையடித்து அவற்றைக் கருப்பாக்குவதிலேயேதான் ஆர்வம். நாட்டு மக்களைப்பற்றி ஏது நினைவுகள்? இப்பொழுது அவளின் வருமானம் அதிகம். எவ்வளவு என்று சொல்லிவிட்டால் பொறாமை கொண்டுவிடுவீர்கள். ஐந்துநாட்கள் வேலை செய்கிறாள். அதற்குமேல் அமெரிக்க அதிபரே அழைத்தாலும் வரமாட்டாள். வருமான வரிவரம்பில் இரண்டு மடங்கு அவளின் மாதவருமானம். வருமான வரியெல்லாம் கிடையாது. 18 வயதிலிருந்து 23 வயதுவரை தொழில் செய்தாள். வீடு கட்டிவிட்டாள். எல்லா வசதிகளும் அடைந்தவள், எல்லாவற்றையும் சொந்தங்களுக்கு விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிவந்து காதலுக்கு மரியாதை செய்து, காதலன், அவனையே திருமணம் முடித்து குடும்பம் நடத்தி வருகிறாள். பழையவாழ்க்கையின் சுவடுகளை அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்டாள். சொந்தங்களை மொத்தமாக மனதிலிருந்து கொன்று எறிந்துவிட்டாள். சுத்தமான மனம் பெற்றுவிட்டாள். சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறாள்.
இனிமையான குடும்பம். ஒரேயொரு மகன். அதோடு போதுமென்று முடிவுசெய்துகொண்டார்கள்.
சந்தோசமாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில், கணவன் அவள்மீது கொஞ்சம் சந்தேகம் கொள்வதினை உணர்ந்துகொண்டாள். அவளின் ஒரு புகைப்படம் முகப்புத்தகத்தில் விபச்சாரிகளின் பக்கத்தில் நிர்வாணமாய் வெளியாகியிருந்தது. அதுதான் அவனின் நடவடிக்கைகளின் காரணம் என்று தெரிந்தது. உடனேயே வேறொரு படத்தைகொண்டு ஒரு முகப்புத்தகத்தின் கணக்கு ஒன்றினைத் துவங்கினாள். நாட்கள் சென்றன. ஒருநாள் அவன் அவளிடம் கேட்டான். காட்டினான். அவளும் அவளின் முகப்புத்தகத்தின் கணக்கினை காண்பித்தாள்.
அவனும் அவளுக்கு ஆருதல்கூறி, இப்படித்தான் பெண்களின் படத்தினை எடுத்து மாறுதல்கள் செய்து விபச்சார பக்கங்களில் வெளியிடுகின்றார்கள், அதனால் உன்படங்களை முகப்புத்தகத்தில் வெளியிடாதே. இருக்கும் படங்களையனைத்தும் அழித்துவிடு என்று அறிவுரை சொன்னான். அதற்கு அவள், அவனுக்குப் பரிசாக ஒரு முத்தம் தந்தாள்.

No comments:

Post a Comment