Sunday 27 January 2013

நிமிடத்தில் மரணம்


அது எங்கிருந்தோ பறந்து வந்தது,
எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
மேலிருந்து கூர்ந்து நோக்கினது,
என்னை மிகவும் ரசித்திருந்தது.
அதன் நடை அழகாக இருந்தது,
என்னைக் கொஞ்சம் கலவரப்படுத்தியது.
என்னை மிக அருகினில் அமர்ந்து ரசித்தது, முகம்சிவந்து வெட்கமாகிப்போனது.
கன்னத்தில் கொத்தியதுகூட இனிமை
அன்புக்காகதான் என்பதால்.
நான் கொண்ட உணவிலும் சிறிதை
உரிமையோடு பகிர்ந்துகொண்டது.
எனக்கு வான்வெளியில் மிதந்திடக்
கற்றுக்கொடுத்ததூவும் அதன் கருணைதான்.
என் முகம் திருப்பி அதைநோக்கி நகைத்ததும்
பயந்து உமிழ்ந்துபின் பறந்துவிட்டது.
சென்ற வானைக் கண்கொட்டாமல்
பார்த்துக்கிடக்கிறேன் வெறுமை பருகி.

No comments:

Post a Comment