Friday 4 January 2013

நீ தாய், ஆசான்


என்னை திருத்திவிட்டாய்.
நல்வழிப் படுத்திட்டாய்.
எப்படியொரு காமுகனாய் நின்றிருந்தேன்.
கண்கள் தெரிந்திடவில்லை.
காதுகளுக்கு இனிமையான இசைகூட தேவையிருந்திடவில்லை.
தேவையெல்லாம் உடலும் உடல் சார்ந்த நீயும் மட்டுமே,
என்றுதான் கிடந்தேன்.
அது சரியா தவறா என்பதினைக்கூட யோசிக்க முடியவில்லை.
எல்லாம் காமனின் விளையாட்டுதான்.
புத்திபுகட்டினாய். அடைத்த கண்களுக்கு ஒளியூட்டினாய்.
என்னையும் வாழவைத்தாய்.

காமரசத்தில் ஆன்மாவின் ஆனந்தத்தினை
ஊற்றியூற்றி நிரப்பிவிட்டிருக்கிறாய்.

கோபமில்லை, பொறாமையில்லை, விரக்தியுமில்லை, வெறுப்புணர்வுமில்லை,
ஆனாலும் அன்பு செலுத்தினாய்.

No comments:

Post a Comment