Tuesday 15 January 2013

எல்லை என்பதே இல்லை!


தமிழும் கவிதையுமாய் இருந்த என்னை
மாற்றி வைத்தாய்!....அன்புக்காய் ஏங்கிய என்னை
பாசத்தால் அரவணைத்தாய்!

விடியும்போதெல்லாம் உன் உருவிலே
என் விழி திறக்கும்!
இடைவிடா வேலைகளுக்கிடையிலும் ...
என் நினைவுகள் உன்னை சுற்றியே பறக்கும்!

மனம்கவர் பாடல்கள்
காதில் ஒலிக்கும்போதெல்லாம்...
நீ எனக்காய் பாடுவது போலவே இருக்கும்!

பூக்கடையில் சிரிக்கும் மல்லிகையை
பார்க்கும்போதெல்லாம்...
என்னவனின் முகம் என்றே என்னுள்ளம் ஆர்பரிக்கும்!

உன் வாய்வழி கசிந்த கடும்சொல் கேட்டு
என் மனம் துடி துடித்து இறக்கும்!....பின் ,
எனைக்கொஞ்சி குளிரவைப்பாய் என்றே
நம்பி அது மீண்டும் ஆவலுடனே உயிர்க்கும்!

உன்னை மறந்திருக்கவோ என்னால் முடிவதுமில்லை!
இந்த பெண் வண்டுக்கோ உன் நெஞ்சம்தானே முல்லை!

நான் உறங்கையிலும் செய்கிறாயே..
என் கனவுக்குள் தொல்லை!
நான் உன்மேல் கொண்டுள்ள அன்புக்கோ
எல்லை என்பதே இல்ல.

No comments:

Post a Comment