Tuesday 8 January 2013

மிச்சமாயும் உச்சமாயும்


நீலப்பந்தின் சிதறிய பச்சையில்
சிறிதாய்யொரு கலங்கள் காடு.
அதில் ஓங்கிவளர்ந்து பெரிதாய் நின்று,
இலைதலை ஆட்டிக்களிக்கும்
ஓர் பிராணன் கக்கும் அரசு.

புரண்டு காதலில் பொங்கிவழியும்,
செவ்விதழ் சிங்காரி,
சித்திரத்துப் சிரிப்பழகி,
பச்சையை உடையாய் கொண்ட,
பதிலுக்குப் பதில்பேசும் பைங்கிளி.

ஏமாற்றுக்காரி, கோபத்தையும்,
தாபத்தையும், காதலையும்,
கோடிட்டுக்காட்டும் வேகத்தையும்
தன்னுள் புதைத்துக்கொண்டு
தடுமாறும் தவிப்புக்காரி.

பிடித்ததெல்லாம் இங்கு
பிடித்திடவில்லை.
கடித்ததேல்லாம் இங்கு
வலித்திடவில்லை.

முகத்தினில் கொடுத்ததெல்லாம்
படித்திடவும் முடியவில்லை.
ஓடிநின்று குலைத்திடுவதேல்லாம்
பழகிடவும் தெரியாததில்லை.

அடைகாத்திட்டக் கருப்புக்கிளி,
கதறிட விருப்பமில்லை.
அருகில் வந்து அன்னத்திற்கு
அணைத்திட ஆசையுமில்லை.

அஞ்சுகமே அடைந்த மகாசிவம்
மட்டுமே காலத்திற்கும்
மிச்சமாயும், உச்சமாயும்.

No comments:

Post a Comment