Friday 7 June 2013

உன்னை சுவாசிக்கிறேன்

உன்னைக்
கண்டநாள்முதல்
சுவாசிக்க
மறந்திருந்தேன்...
நேசிக்கத்
தெரிந்திருந்தேன்....

உன்னை
நேசித்திருந்தால்
மறுக்கவோ மறக்கவோ
செய்திருப்பேன்...

ஆனால்
நான் உன்னை
சுவாசிக்கிறேன்...
மறந்தாலும் மறுத்தாலும்
மரணம் எனக்குத்தான்...

நேற்றைய பொழுது
உன்னுடன்
கழிந்தது
இனிமையாக...
மயக்கும் உன் கண்ணசைவுடன்....

இன்றைய பொழுது
உன் நினைவுகளுடன்
கழிந்தது
தனிமையில்...
அமைதி பேசின நிலவு துணையுடன்...

நாளைய பொழுதும்
உன்னோடு வேண்டும்
உன் அன்பிலும்...
அரவணைப்பிலும்...
அடங்க மறுக்கும் உன் திமிரிலும்...

No comments:

Post a Comment