Tuesday 4 June 2013

நிழல்கூட அழகு

வான் கொண்ட நிலவுக்கு
மூன்றாம் பிறை அழகு...

தேன் கொண்ட மலருக்கு
அதன் நிறம், மணம் அழகு.....

விண் கொண்ட நிலமகளுக்கு
விளைந்ததெல்லாம் அழகு....

பண் கொண்ட பாடலுக்கு
கவிதை வரிகள் அழகு...

கண் கொண்ட காதலிக்கு
துடிக்கும் அசைவு அழகு....

காண், நீ கொண்ட கூந்தலுக்கு
கண்மறைத்துக் காற்றாடும் கலை அழகு....

பொன் கொண்ட கைகளுக்கு
வீசி நடக்கும் நடை அழகு....

தான் கொண்ட மார்புக்கு
ததும்பும் அலைநிலை அழகு....

சான் கொண்ட வயிற்றுக்கு
தணிந்திருக்கும் தசை அழகு....

வீண் கொண்ட ஊடலுக்கு
வந்துருளும் கோபம் அழகு...

மான் கொண்ட கோபத்திற்கு
முடிவினில் உரசும் முத்தம் அழகு....

உன் கொண்ட இதழ்களுக்கு
தேன் ஊரும் நா அழகு....

ஊண் கொண்ட கால்களுக்கு
இணையவைத்த பின், அழகு....

நான் கொண்ட காதலுக்கு
நீ மட்டும்...
இல்லை... இல்லை...
உன் நிழல் கூட அழகு தான்...!

No comments:

Post a Comment